India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பீகாரில் எந்நேரமும் ரீல்ஸ், இன்ஸ்டாவில் போட்டோ போடுவது என மூழ்கிய மனைவி மீது போலீஸ் ஸ்டேஷனில் கணவர் புகார் அளிக்கிறார். அந்த புகார் குடும்ப ஆலோசனை மையத்திற்கு வருகிறது. அவர்களிடம், ‘புருஷன கூட விட்டுருவேன்… ஆனா இன்ஸ்டாவை விட மாட்டேன், அது என் பர்சனல் விஷயம்’ என மனைவி கூறி அதிர வைத்துள்ளார். என்ன பண்ணுவது என புரியாத ஆலோசகர்களும், அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
ரோஹித் குண்டாக இருக்கிறார் என கூறி <<15635681>>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்<<>> சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது குறித்த BJPயின் செய்தித் தொடர்பாளரின் பதிவில், டெல்லியில் 90 தேர்தல் சீட் இழப்பது தான் காங்கிரசுக்கு ஈர்ப்பானது என விமர்சித்தார். நெட்டிசன்களும், தொடர் தோல்வி பெறும் காங்கிரசுக்கு, வெற்றி பெறும் கேப்டன் Unimpressive தான் என விமர்சிக்கின்றனர். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
20 ஏக்கர் நிலத்திற்காக யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக்கட்டிய பலே இளைஞர் 3 மாதங்களுக்கு பிறகு சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில், உறவினர் சபரி, யூடியூப் பார்த்து 6 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.
இங்கி. கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகினார். இது குறித்து உணர்ச்சிவசத்துடன் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘தலைமைத்துவ பொறுப்புகளிலிருந்து சோகத்துடன் விலகுகிறேன். விலக இதுவே சரியான நேரம். ஆதரவு தந்த அனைத்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், என் மனைவி லூயிஸுக்கும் நன்றி. இவர்களே என் பயணத்தின் தூண்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த விழாவில் பேசிய அவர், கடந்த 10 வருடங்களில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் 7ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல,
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் IMD கணித்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் (PK) குழு பணிபுரிந்ததாக கூறப்படுவதுண்டு. ஆனால் இதை 2 தரப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொன்னதில்லை. இந்நிலையில், 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்காக களமிறங்கியுள்ளது PK குழு. முந்தையத் தேர்தலில் PKவின் திட்டம் வென்ற நிலையில், 2026 தேர்தலில் மீண்டும் பலிக்குமா? இல்லையா? என்பது மக்கள் கையிலேயே உள்ளது.
அதிமுகவின் கூட்டத்திற்கு வருவோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளியில் வரும் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருவோரில் 3 பேருக்கு தங்கம், 300 பேருக்கு மிக்சி, குக்கர், ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
தமிழக மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படை கைது செய்வதாக கூறிய அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, அதை செய்யத்தவறியதோடு, அவர்கள் மீதே அவதூறு பரப்பி வருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வெறி பிடித்தவர்கள் போல. நேற்று க்ளென் பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்து கோலியை அவுட்டாக்கினார். உடனே சோஷியல் மீடியாவில் கோலி ரசிகர்கள் கம்பு சுத்த தொடங்கிவிட்டனர். பிலிப்ஸின் அக்கவுண்டில் சரமாரியாக கமெண்ட்டுகளை செய்கிறார்கள். ஆனால், அது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸின் சோஷியல் மீடியா பேஜ் என அவர்களுக்கு தெரியவில்லை. இதுக்கு தான் படிங்கடா’னு சொல்றது!
Sorry, no posts matched your criteria.