India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். கட்சித் தொடங்கிய பின், இதுபோன்ற விழாவில் விஜய் பங்கேற்பது இதுவே முதல்முறை.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று நடந்த சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது. ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவரை, ஒருவாரம் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் ₹9.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் நீங்கள் (திமுக) அடித்த கமிஷன் எவ்வளவு என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 2014இல் ₹55.17 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன், தற்போது ₹181.74 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதில் நீங்கள் (பாஜக) அடித்த கமிஷன் எவ்வளவு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிந்து 73,085 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேவேளையில் மும்பை பங்குச் சந்தையான நிஃப்டியில் டெக் மஹிந்திரா, L&T, டைட்டன், கோட்டக் மஹிந்திரா, எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், TCS நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. ஆனாலும், HDFC, HCL, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. இதனால், நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால் உங்கள் கட்சியின் (பாஜக) அமைச்சர்களிடம் கேட்டு நிலுவையில் இருக்கும் கல்வி, 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியை பெற்றுத் தாருங்கள் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். மேலும், அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல என்று கடுமையாக சாட்டியுள்ளார்.
தங்களுக்கு அழைப்பு இல்லாததால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் கட்சி HC-ல் மனு தாக்கல் செய்துள்ளது. எந்த தேர்தலிலும் களம் காணாத பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கூட்டத்திற்கு தடைவிதிக்கும்படியும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 5இல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பத்தூரில் நிர்வாணமாக வீடியோ எடுத்து அஞ்சல் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை பராமரிக்க வந்த பெண்ணுடன், அந்த நபர் நெருங்கிப் பழகியுள்ளார். இதனைப் பயன்படுத்தி அந்த நபரை நிர்வாணமாக வீடியோ எடுத்த பெண் அவரது தோழிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் இரு பெண்களும் சேர்ந்து ₹5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ₹2.5 லட்சத்தை கொடுத்த நபர் போலீசிலும் போட்டுக் கொடுத்துள்ளார்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று, தவெக மகளிர் அணி சார்பில் இந்தக் கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தவெக இந்தக் கருத்தரங்கை நடத்தவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில், வருங்காலத்தில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் தான் இபிஎஸ் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் அவருக்கு குருட்டு அதிர்ஷ்டத்திலும், லாட்டரி சீட்டு யோகம் போலவும்தான் முதல்வர் பதவி கிடைத்தது. அதை பயன்படுத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கையில் வைத்துள்ளார் என்றும் சாடியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.