News March 3, 2025

நாளை 5 மாவட்டங்களில் விடுமுறை

image

நாளை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி குமரி மாவட்டங்களுக்கும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும், பொதுத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.

News March 3, 2025

காதலன் கவலைக்கிடம்.. எலி பேஸ்ட் காதலி கைது

image

விழுப்புரத்தில் காதலனை <<15637846>>கொடூரமாக கொலை செய்ய முயற்சி<<>> செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் ஜெயசூர்யாவுக்கு காதலி ரம்யா தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட காதலன் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, தனது குடும்பத்துடன் தலைமறைவான ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.

News March 3, 2025

இயர்போன் பயன்படுத்துவோரா நீங்கள்!

image

அதிக ஒலியிடும் சாதனங்களை பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சாதாரண ஒலி அளவில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் 50 டெசிபல் ஒலிக்கும் குறைவாக இருக்கும் இயர்போனை பயன்படுத்தவும். இயர்போனை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஹெட்போன் பயன்பாட்டை குறைக்க நீங்கள் என்ன செய்வீங்க கமெண்ட் பண்ணுங்க

News March 3, 2025

போப் உடல்நிலை எப்படி இருக்கிறது? வாடிகன் விளக்கம்

image

நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், 88 வயதான போப் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 3, 2025

சர்ச்சைக்கு ஒரே வரியில் பதிலளித்த ரோகித்

image

CT தொடரின் அரையிறுதிப்போட்டியில் நாளை IND – AUS மோதுகின்றன. இதற்கிடையில் ஒரே மைதானத்தில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் விளையாடுவதும், இதனால் தான் அரையிறுதிக்கு முன்னேறியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து ரோகித் சர்மா, அரையிறுதியில் எந்த மைதானத்தில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த துபாய் கிரவுண்டு எங்களுக்கும் புதிது தான், Home Ground கிடையாது என விளக்கமளித்தார்.

News March 3, 2025

இடமாறும் கிரகங்கள்: 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

image

இந்த மார்ச் மாதம் சனி பகவானுடன் சேர்ந்து சூரியனும், புதனும் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். இந்த மாற்றத்தால் மேஷம், மிதுனம், கடகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. சமூகத்தில் மதிப்பு உயரும். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு திக்குமுக்காட செய்யும். முதலீடு, வியாபாரம் செழிக்கும்.

News March 3, 2025

புகைப் பழக்கம் இல்லையா? 6 நாள் லீவு

image

ஆபிஸ் டென்ஷன், ஒரு தம் போட்டு வரலாம் என பிரேக் எடுப்பவர்கள் அதிகம்! இப்படி நேர விரயம் செய்வதை தடுக்க டோக்கியோவில் இயங்கும் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 6 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு அளிப்பதுதான் அது. இதனால், அலுவலக நேரத்தில் ஊழியர்கள் புகை பிடிப்பதை குறைக்கலாம் என்பது நிறுவனத்தின் எண்ணம். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 3, 2025

20 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றியவர் காலமானார்

image

‘தங்க கைகளை கொண்டவர்’ எனப் போற்றப்படும் ரத்த தானத்தில் சிறந்த ஜேம்ஸ் ஹாரிசன்(88) ஆஸ்திரேலியாவில் காலமானார். 18 வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கிய அவர், தன் 81 வயது வரை தொடர்ந்தார். இவரது ரத்தத்தில் Anti-D என்ற மிக அரிதான ஆன்டிஜென் உள்ளது. இது குழந்தைகளின் உயிரை பறிக்கும் ரத்தநோயை (HDFN) தடுக்கவல்லது. தன் ரத்த தானத்தின் மூலம், இவர் இதுவரை 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். RIP!

News March 3, 2025

கார்ல்சன் சர்ச்சை ஜீன்ஸ்… ஏலத்தில் அடித்த ஜாக்பாட்!

image

பொதுவாகவே பிரபலங்கள் அணிந்த ஆடைகள் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம். அந்த வரிசையில் செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனும் இணைந்துள்ளார். 2024 BLITZ செஸ் தொடரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால், விதிகளை மீறியதாக ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த ஜீன்ஸ் பேண்ட் ஏலம் விடப்பட்டது. அதனை இந்திய மதிப்பில் சுமார் 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2025

முட்டை விலை குறைந்தது

image

அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் முட்டை விலை மளமளவென்று குறைந்துள்ளது. இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலை 20 காசுகள் குறைத்து ₹3.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் முட்டை விலை 110 காசுகள் குறைந்து, நாள் ஒன்றுக்கு சுமார் ₹5.50 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், இன்று 20 காசுகள் குறைந்ததால் மேலும் இழப்பு அதிகரிக்கும் எனவும் பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!