India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.
தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
J&K தீவிரவாத தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என காங். எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முன்னுதாரணம் காட்டி, அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பக்கா பாஜககாரர் போல அவர் பேசுவதாக காங். பதிலடி கொடுத்துள்ளது.
*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள். *இந்த உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.
இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் LSG படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன் சேர்த்து LSG கேப்டன் பண்டுக்கு இன்னொரு அடியும் விழுந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவருக்கு ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த MI-க்கு எதிரான போட்டியிலும், அவருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
உங்கள் கணவனோ, மனைவியோ உங்களை கட்டுப்படுத்த (அ) தவிர்க்க நினைக்கிறார் என்பதை இந்த அறிகுறிகளால் அறியலாம்: *குடும்பத்தினர், உறவினர்கள் & நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவது *சின்ன விஷயங்களுக்கு கூட உங்களையே குறைகூறுவது *தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் உங்களையே காரணமாக்குவது *குடும்பம், குழந்தைகள், வசதி இவற்றை காட்டி உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது *உங்கள் சாதனைகளை அங்கீகரிக்காதது. வேறு ஏதாவது?
▶ ஏப்ரல் 28 – சித்திரை- 15 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: வளர்பிறை
Sorry, no posts matched your criteria.