News March 4, 2025

சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

image

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.

News March 4, 2025

பாப் மார்லி பொன்மொழிகள்

image

*பணம் என்பது வெறும் எண்களே மேலும் எண்கள் ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவை என்றால், மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் ஒருபோதும் முடிவடையாது. *உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும். *வாழ்க்கை முழுவதும் கைதியாக இருப்பதை விட, சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது மேலானது.

News March 4, 2025

சர்வதேச அரசியலில் மிகப் பெரிய மாற்றம்!

image

NATO, ஐநா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில் இருந்து வெளியேற USA முடிவு செய்துள்ளது. இது குறித்த மிகப்பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நலன்களுக்கு செயல்படும் அமைப்புகளுக்கு ஏன் USA அதிக நிதி வழங்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது. இது சாத்தியமானால், ஐரோப்பா தனித்து விடப்பட்டு, அது ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறும்.

News March 4, 2025

IND vs AUS போட்டிக்கு புது மைதானம்

image

CT தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் IND vs AUS அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும், IND அணி ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற அணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டி புது மைதானத்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்திவ் சாண்ட்ரி மேற்பார்வையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தயார் செய்துள்ளது.

News March 4, 2025

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

image

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 196 ▶குறள்: பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். ▶பொருள்: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

News March 4, 2025

கமிட்மென்ட் இருந்ததால் வர முடியவில்லை: லைலா

image

ஏற்கனவே ஒப்புக்கொண்ட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ‘பாலா 25’ நிகழ்விற்கு வர முடியவில்லை என நடிகை லைலா விளக்கம் அளித்துள்ளார். ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருப்பதற்கு பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம் தான் காரணம் எனவும், அப்படத்தில் தான் பேசிய வசனத்தை ரசிகர்கள் இன்றும் மீம்சாக பயன்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

டிரம்ப் அவமானப்படுத்திய பிறகும் ஜெலன்ஸ்கி உறுதி

image

டிரம்ப் நிர்வாகத்துடன் சுமூகமான உறவை பேண முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். USA எதிர்பார்க்கும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அந்நாட்டு வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது கடினம் என்பதால், தன்னை பதவியில் இருந்து நீக்குவதும் கடினம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

இன்றைய (மார்ச்.04) நல்ல நேரம்

image

▶மார்ச்- 04 ▶மாசி – 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 08:30 AM – 09:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM- 01:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: அஸ்தம் ▶நட்சத்திரம் : அசுவினி.

News March 4, 2025

ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

image

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொலை வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜி மற்றும் தஞ்சை எஸ்.பி.யை நியமித்து உத்தரவிட்டனர்.

error: Content is protected !!