India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தொடர்ந்து, மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். எனவே, குழந்தைகள், முதியோர்கள் மதியம் 12 – 3 மணி வரை வெயிலில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும், மன உளைச்சலையும் போக்க சில பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழை, பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு ஆகிய பழங்கள்தான் அவை. வாழைப்பழத்தின் மெக்னீசியம், மாதவிடாய் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. பப்பாளியின் விட்டமின் A, ஹார்மோன் சமநிலையை காக்கிறது. ஆப்பிளின் நார்ச்சத்தும், இரும்பு சத்தும் சோர்வு, மனநிலை மாற்றத்தை போக்குகிறது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயம், உணவுப் பொருட்களுக்கு, சீனா புதிதாக 10% – 15% வரை வரி விதித்துள்ளது. முன்னதாக சீன பொருட்களுக்கான வரியை 10%இல் இருந்து 20% ஆக USA உயர்த்தியதால் இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. USA அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு தடாலடியான முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால் வர்த்தகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
BJP உடன் ADMK கூட்டணி வைக்க EPS விரும்புவதாக செய்தி வெளியானது. இது குறித்த கேள்விக்கு, அதிமுக தங்களுக்கு எதிரி அல்ல என அண்ணாமலை சூசகமாக பதிலளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள், பல மாற்றங்கள் நிகழும் எனக் கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை தற்போதே கூற முடியாது என்றார்.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை கையெழுத்தானதாக கூறியிருந்தார். அதனை இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் சொல்வது உண்மை?
அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான் என இபிஎஸ் கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி எனவும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டர்கள் கூட உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். தங்களை பலர் முடக்க பார்த்தும் முடியவில்லை என கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்றார். மேலும், திமுகவை வீழ்த்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 2017ல் சாலையில் நடந்துசென்ற ராஜசேகர் என்பவர் வேன் மோதி உயிரிழந்தார். ஓட்டுநர் போதையில் இருந்ததால் காப்பீட்டு நிபந்தனைகளை மீறுவதாக கூறி, இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் உருவத்தை விமர்சித்த ஷாமா முகமது பேச்சுக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் உருவ அமைப்பை அவமதிக்கும் விதமாக இதுவரை யாரும் பேசியது இல்லை எனவும், PAK-இல் மட்டுமே இப்படி விமர்சிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வீரர்களை அவமதிக்கும் இத்தகைய பேச்சுக்கு ஷாமா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கி உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், மொழித் திணிப்பு ஏன்?, மும்மொழிக் கொள்கையால் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீதான மொழித் திணைப்பை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்.
ட்ரிப் போகும் போது, பெரிய பிரச்னையே ஆள் அரவமற்ற இடத்தில் வண்டி பெட்ரோல் காலியாகி நின்றுவிடுவது தான். வெறுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு கண்டுபிடித்துள்ளது. Fuel@Call என்ற ஆப்பை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்க ஆர்டர் கொடுத்தால், உங்களை தேடி பெட்ரோல்/டீசலை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். SHARE IT.
Sorry, no posts matched your criteria.