News March 5, 2025

இந்த தகுதி இருந்தால் தான் அரசு ஓட்டுநர் பணி

image

ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் & பரிசோதகர் (DICI) பணியிடங்களை அமல்படுத்தும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர் நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10th முடித்திருக்க வேண்டும் என்ற விதிகளில் திருத்தம் செய்து கனரக ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் மற்றும் முதலுதவி பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை

image

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 24ஆகவும், அதிகபட்ச வயது 40ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் வயது தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியை பொறுத்தவரை 160 செ.மீ. உயரத்துடன் 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

அதிர்ந்தது பிஹார் சட்டமன்றம்- தலைவர்கள் வார்த்தை போர்!

image

பிஹார் சட்டமன்றத்தில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மோதல் முற்றியதால், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான வார்த்தைகளை உங்கள் தந்தை பயன்படுத்தியதாக தேஜஸ்வி கூறினார். இதற்கு பதிலளித்த சாம்ராட், உங்கள் தந்தை லாலு இந்த மாநிலத்தை கொள்ளையடித்தார் என சாடினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

News March 4, 2025

இத்தனை கொடூர மனிதர்களா? மோடி ஆவேசம்

image

குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடி, இன்று வந்தாராவில் உள்ள விலங்குகள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றும் பாகன்களால் சித்ரவதைக்கு உள்ளான யானைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், மனிதர்களால் எப்படி இவ்வளவு கொடூரமாக நடக்க முடிகிறது? இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மதுபானம் தரும் நிறுவனம்

image

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம், ஜாக் டானியல்ஸ். இது மாதா மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு Daniel’s Old No. 7 விஸ்கி பாட்டிலையும் ப்ரீயாக தருகிறது. டென்னஸி மாகாணத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ள மூர் கவுன்ட்டியில், மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆகவே, ஊழியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவ கொண்டுவந்த இப்பழக்கம், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.

News March 4, 2025

221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

image

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?

News March 4, 2025

145 மருந்து, மாத்திரைகள் போலி: மத்திய அரசு

image

சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று போன்ற பிரச்னைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்து, மாத்திரைகள் தரமற்றது என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 1,000க்கும் அதிகமான மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இமாச்சல், உத்தராகண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மாத்திரைகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த போலி மருந்துகளை <>இந்த<<>> இணையதளத்தில் அறியலாம்.

News March 4, 2025

BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

image

CT தொடரின் 1st Semi-Final-லில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியில் அட்டகாசமாக விளையாடிய கிங் கோலி 84 ரன்கள் விளாசி அசத்தினார்.

News March 4, 2025

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்: நயன்

image

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று, அது என்னை மட்டுமே குறிக்கிறது. பட்டங்கள், விருதுகள் மதிப்புமிக்கவை, சில நேரங்களில் அவை தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும். எனவே, நயன் என பெயரை மட்டும் குறித்து அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கோபம் வந்தாலும் ரமலானுக்கு வாழ்த்து சொல்வோம்: உதயநிதி

image

இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களின் சொந்த வீடு போல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் முதலில் துணையாக நிற்பது திமுகதான் எனக் கூறிய அவர், ரமலானுக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலருக்கு கோபம் வரும். அப்படி வந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!