News March 7, 2025

Work From Homeல் இன்ஃபோஸிஸ் கட்டுப்பாடு

image

Work From Home முறையில் கட்டுப்பாடு விதிக்க, தலைமை பொறுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது. ஒரு மாதத்திற்கு கட்டாயம் 10 நாள்கள் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் எனவும், இந்த நடைமுறை வரும் 10ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. வேலை நிலை 5ல் உள்ளவர்கள், அதாவது TL, சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது பொருந்தும்.

News March 7, 2025

ஜாக் மா பொன்மொழிகள்

image

*ஒரு தலைவருக்கு அதிக சகிப்புத்தன்மையும், தோல்வியை ஒப்புக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். *நான் மற்றவர்களால் விரும்பப்படுபவராக இருக்க விரும்பவில்லை, நான் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருக்க விரும்புகிறேன். *இந்த உலகில் மிகவும் நம்பமுடியாத விஷயம் மனித உறவுகள். *நீங்கள் சொல்வதை இந்த உலகம் நினைவில் கொள்ளாது, ஆனால் நீங்கள் செய்ததை அது நிச்சயமாக மறக்காது.

News March 7, 2025

CT FINAL: நடுவர்கள் அறிவிப்பு

image

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, AUSஐ சேர்ந்த பால் ரெஃபில் மற்றும் ENGஐ சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பர். இலங்கைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3rd Umpire ஆக ஜோயல் வில்சனும், 4th Umpire ஆக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 7, 2025

தீவிரவாதியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல்?

image

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ராணா, USA சுப்ரீம் கோர்ட்டில், அவசர மேல்முறையீடு செய்துள்ளான். தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற காரணத்தால், அதீத சித்ரவதை, மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே நாடு கடத்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளான். கோர்ட் இந்த மனுவை பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை தேதியை இன்னும் ஒதுக்கவில்லை.

News March 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

News March 7, 2025

போலீஸ் கஸ்டடியில் நடிகை

image

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

News March 7, 2025

ஷமி பாவம் செய்துவிட்டார்: முஸ்லிம் மதகுரு

image

புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிக்காமல் ஷமி பாவம் செய்துவிட்டதாக முஸ்லிம் மதகுரு மௌலானா சஹாபுதீன் ரஷ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். IND vs AUS போட்டியின் போது ஷமி கூல்டிரிங் குடித்தது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பயணத்தில் இருக்கும் போது நோன்பை கடைபிடிப்பதில் குரானில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

News March 7, 2025

இன்றைய (மார்ச் 7) நல்ல நேரம்

image

▶மார்ச்- 07 ▶மாசி – 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: திதித்துவயம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: விசாகம் ▶நட்சத்திரம் : ரோகிணி.

News March 7, 2025

27 வயசுதான் வாழ்க்கையின் ஆரம்பம்: மணிகண்டன்

image

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நடிகர் மணிகண்டன் லைஃப் டைம் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். 27 வயசு வரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவோம். நிறைய கனவு காணுவோம். ஆனா, 27க்கு அப்புறம் வாழ்க்கை ஓங்கி ஒரு அறைவிட்டு, இதுதான்டா உன் வாழ்க்கை, இதுலதான் நீ வாழனும்னு சொல்லும். அப்போ லைஃப்பை பிடிச்சுக்கிட்டா நீ தப்பிச்சிருவ, அசால்ட்டா விட்டுட்டனா, வாழ்க்கை உன்னை விட்ரும் என மணிகண்டன் அறிவுரை கூறினார்.

News March 7, 2025

அமெரிக்காவில் இந்தியக் குழந்தைகளுக்கு புது சிக்கல்!

image

அமெரிக்காவில் H1-B விசா மூலம் தங்கியிருக்கும் இந்தியர்களின் பிள்ளைகள் 21 வயதை எட்டும் வரை, அவர்களுக்கு சார்பு விசா வழங்கப்படும். 21 வயதை எட்டியதும் அவர்களும் வழக்கமான விசாவை பெற வேண்டும். அப்படி பெறாதவர்கள், 2 ஆண்டுகளுக்குள் அந்த விசாவைப் பெற அவகாசம் இருந்தது. ஆனால், சமீபத்தில் அந்த அவகாசம் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள 1.34 லட்சம் இந்தியப் பிள்ளைகள் அங்கிருந்து வெளியேறும் சூழல் எழுந்துள்ளது.

error: Content is protected !!