India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், 50 லட்சம் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். உள்நாட்டு பயண கட்டணம் ₹1,279, சர்வதேச பயண கட்டணம் ₹4,279-லும் துவங்குகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி 2026 மார்ச் 31 வரை டிக்கெட் புக் செய்யலாம்.
கடந்த கல்வியாண்டுகளில் ப்ளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலக் கல்வி கொள்கையின் படி, நடப்பாண்டு முதல் ப்ளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆனால், முந்தைய கல்வி ஆண்டுகளில் ப்ளஸ் 1 தேர்வு எழுதி ஏராளமானவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளதால், அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.
குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனில் விளையாடினால்: *பெருவிரல் வீங்கும் `video gamers thumb’ பாதிப்பு வரும் *போனுக்கு அடிமையாவர்; படிப்பு & அன்றாட செயல்கள் பாதிக்கும் *ஆன்லைன் விளையாடினால் தேவையின்றி முன்பின் தெரியாத நபர்களுடன் தொடர்பு ஏற்படும் *தூக்கமின்மை, சோர்வு, பலவீனம், கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல் ஏற்படும் *பொய் சொல்லுதல், ஒழுக்கக்கேடு அதிகரிக்கும்.
நடிகர் சூரி 10 முதல் 15 கோடி வரை சம்பளம் கேட்பதால், அவரை வைத்து படம் எடுக்க சில தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம். இதனால், சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க அவர் திட்டமிட்டு வருகிறாராம். சொந்த நிறுவனத்தில் தனக்கு பிடித்த, பொருத்தமான கதைகளை தயாரித்து நடிக்கலாம் என அவர் முடிவெடுத்துள்ளாராம். முன்னதாக, ‘கருடன்’ படத்தை சூரியின் மேனேஜர் தயாரித்து இருந்தார்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு வயதாகி வருவதால், அவர் 2026 டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. அதனால், டி20 அணியையும் வழிநடத்தும் வகையில் கில்லுக்கு இந்த புதிய வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ODI அணியின் துணை கேப்டனாகவும் இருக்கிறார்.
INDIA கூட்டணி கட்சி MP-க்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டே பாஜக ஆட்சிக்கு வந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். அதேபோல், பிஹார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த 2 புகாரை விசாரிக்க வலியுறுத்தி இன்று பேரணி செல்ல உள்ளனர்.
*1950 – ஆப்பிள் ஐபோன் நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாக் பிறந்தநாள். *1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கேற்ற 16 தமிழர்கள் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். *1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசியப் பகுதிகளான தாத்ரா, நகர் ஹவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.
ஹமாஸை வீழ்த்த காஸா முழுவதும் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவை சுதந்திரப்படுத்துவதே தங்களது குறிக்கோள் எனவும், மக்கள் பலி, உதவிப்பொருட்கள் பற்றாக்குறைக்கு ஹமாஸே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காஸாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு குறுகிய கால அட்டவணை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்வது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக விமர்சித்துள்ளார். நானே எல்லோருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைப்பதாகவும், அதனாலேயே இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6.1 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக, ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.