India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவுப் பொருட்கள் விலை 5% கீழ் குறைய வாய்ப்புள்ளது என யூனியன் வங்கி கணித்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதத்திற்குப் பின் முதல் முறையாக இந்த வீழ்ச்சி காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 4.31% இருந்த நுகர்வோர் நிலை குறியீடு பிப்ரவரியில் 3.94% ஆக குறைந்துள்ளது. வெங்காயம், உருளை, தக்காளி விலை குறைந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமையல் எண்ணெய், சர்க்கரை விலை ஏறுமுகத்திலேயே உள்ளது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ. 8,040க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.64,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1.08 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. SHARE IT.
மகளிர் தினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னையாக, ஆசிரியையாக, சகோதரியாக, மகளாக, தோழியாக என வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தனது X பக்கத்தில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தமிழகத்தில் பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விமர்சித்துள்ளார்.
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது என நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவை புகழ்ந்துள்ளார். லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்கிறார். பல்வேறு இசைக்கருவிகள் வழியே காற்றில் ஒலிக்கும் இசையை ரசிக்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்தும் சாமி உங்களால் இந்தியாவுக்கே பெருமை! பாராட்டுகள் என வாழ்த்தியுள்ளார்.
சிவகாசியில் நடந்த கூட்டத்தில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்னொரு முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். மா.பா. பாண்டியராஜனை போல தாம் கட்சியைக் காட்டி கொடுப்பவன் அல்ல என்றும், அவரை தொலைத்து விடுவேன் என்றும் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். இதுகுறித்து சென்னை சென்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து மா.பா. புகார் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி மேடை அமைத்து திண்ணைப் பிரசாரக் கூட்டம் நடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், மேலும் 19 அதிமுக நிர்வாகிகள் மீதும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2018 என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஜூட் அந்தோனி, அடுத்து சிம்புவுடன் இணைவதாக பேசப்பட்டது. ஆனால், வெளியான சிம்பு பட அறிவிப்புகளில் அப்படம் இடம் பெறவில்லை. இந்த சூழலில்தான், இப்படத்தில் ஹீரோவாக SK நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சின்ன சின்ன மாற்றங்களுடன் இப்படத்தில் SK இணைவதாக கூறுகிறார்கள். படத்தை AGS தயாரிக்கிறதாம். சிம்பு ரோலில் SK?
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது, சுப்மன் கில் விக்கெட் எடுத்ததை கொண்டாடியது இந்திய ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. தொடர் மீம்ஸ் வந்த நிலையில், அவர் கில்லிடம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். ‘ஒரு விக்கெட் எடுத்த பிறகு அப்படி கொண்டாடுவது எனது பழக்கம். ஆனால் சிலர் அதை விரும்பவில்லை. எனவே எனது கொண்டாட்டங்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
அரசு கேபிள் நிறுவனத்தில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப் படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சேனலில் 1 மணி நேரம் ஆபாசப் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, பட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கும் என திமுக அறிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்ற பெயரில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
Sorry, no posts matched your criteria.