News March 9, 2025

ஹாஸ்பிட்டலுக்கு நேரில் சென்ற மோடி

image

நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்தார். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ரத்தக்குழாயில் ஸ்டண்ட் பொருத்தி மருத்துவர்கள் தொடந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டிருக்கும் மோடி, தன்கர் நலம் பெற பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 9, 2025

‘ரெட்ரோ’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

image

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2வது பாடல் விரைவில் வெளியாகும் என்றும், அது வித்தியாசமாக இருக்கும் என்றும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

News March 9, 2025

புது மனைவியை பழி வாங்கிய கணவன்.. அடப்பாவி

image

கடலூரில் திருமணமான 26வது நாளில் கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், கலையரசன் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிய ரசீது, சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை பழிவாங்கவதற்காக அவர் இதுபோன்று பொய் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 9, 2025

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அங்குள்ள இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.

News March 9, 2025

CT FINAL: கேட்ச் பிடிப்பதில் கோட்டைவிடும் இந்திய வீரர்கள்

image

CT ஃபைனலில் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது. ஆனால், ஃபீல்டிங்கில் நம் வீரர்கள் சொதப்புகின்றனர். மொத்தமாக 4 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 7, 8வது ஓவர்களில் ரச்சின் கொடுத்த வாய்ப்பை ஷமி, ஸ்ரேயாஸ் மிஸ் செய்தனர். 35வது ஓவரில் மிட்செல் கேட்சை ரோகித் தவறவிட்டார். அடுத்த ஓவரிலேயே பிலிப்ஸ் கொடுத்த கடினமான கேட்சை கில் விட்டுவிட்டார். ஃபைனலில் இந்திய வீரர்கள் கேட்ச் விடுவது பற்றி உங்கள் கருத்து?

News March 9, 2025

11ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 36 வயது பெண்!

image

மகாராஷ்ட்ரா, நாக்பூரில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கும், 3 பிள்ளைகளின் தாயான 36 வயது பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவனது பெற்றோர், சிறுவனை வேறு
இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனாலும், அப்பெண் மீது கொண்ட மோகத்தால், அச்சிறுவன் ஊரை விட்டு ஓடியுள்ளார். புகாரின் பேரில் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அப்பெண் மீது கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளனர். கலிகாலம்டா சாமி.

News March 9, 2025

இன்னும் 46 ரன்களே… புதிய சாதனைக்கு ரெடியாகும் ‘கிங்’…!

image

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். அந்த வரிசையில் இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு சாதனை காத்திருக்கிறது. சாம்பியன் டிராபி தொடர்களில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 46 ரன்களே தேவை. கோலி 746 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கிறிஸ் கெய்ல் 791 ரன்களுடன் பட்டியலில் முதலில் உள்ளார்.

News March 9, 2025

₹99 லட்சம் பரிசு .. பாஜக அறிவிப்பு

image

மத்திய பாஜக அரசு இந்தியை திணிப்பதாக பல அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ₹99 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், திமுக அமைச்சர் மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்கக் கூடாதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

News March 9, 2025

முகூர்த்த நாள்.. பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்

image

மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதன் காரணமாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

News March 9, 2025

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கே மதிப்பில்லை: துரைவைகோ

image

தவெக கட்சி குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து சரியானது அல்ல என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். தவெக ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தலில் விஜய் கட்சி வெற்றி வாகை சூடும் என கூறியிருந்தார். இது குறித்து பேசிய துரைவைகோ, பணம் கொடுக்கும் கட்சிக்காக பணியாற்றுபவர் என பி.கே.வை விமர்சித்துள்ளார். தவிர, பீஹாரில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!