India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக கூட்டணிக்காக சில கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை சாடியிருந்தார். அதிமுகவை மனதில் வைத்து அவர் அப்படி கூறவில்லை என இபிஎஸ் பம்மினார். அண்ணாமலையும் தான் அதிமுகவை சொல்லவில்லை என பின்வாங்கினார். இதைவைத்து, 2026 தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என பரவும் செய்தி உண்மைதான் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மிக பின்தங்கிய SC, ST மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கான ஹாஸ்டல்கள் செயல்படுகின்றன. ஆனால், தமிழகம் உள்பட எந்த மாநில அரசும் இதை ஒழுங்காக பராமரிப்பதில்லை. இந்நிலையில், கடந்த 8 மாதங்களில் மட்டும், ஒடிசாவில் உள்ள SC, ST ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 6 பேர் தற்கொலையானதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தெரியாத பலிகள் எத்தனையோ?
கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கோடை காலம் ஆரம்பித்து இருப்பதால், மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின்தடை ஏற்படலாம் எனக் கூறப்படுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தங்குத்தடையின்றி மின்சார விநியோகம் நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதாகக் கூறினார்.
<<15698647>>சிரியாவில்<<>> ஆசாத் ஆட்சியில் அலவாய்ட் சிறுபான்மை சமூகத்தினர் செல்வாக்கு பெற்று விளங்கினர். அவர்கள் பகுதியில் அரசு பாதுகாப்புப் படை 2 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அலவாய்ட் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையும் அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நாளை கூடுகிறது. இதில் திமுக எம்பிக்கள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சம்மரில் இந்த முறை வெயில் பயங்கர உக்கிரமாக இருக்குமாம். அதனால், வயதானவர்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வெளியே வராமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஹீட் ஸ்ட்ரோக்கால் உடல்நலம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க இளநீர், நன்னாரி, எலுமிச்சை சாறு என இயற்கையான ஜூஸ்களை நிறைய குடித்தாலே போதும், கோடை காலத்தை குளு, குளுவென ஓட்டிவிடலாம்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு வலி காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக் போன்ற கோடைகால உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஹாஸ்பிடல்களில் போதிய வசதிகள் இல்லை என்ற தகவல் வியர்க்க வைத்திருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த இந்தியாவிலும் 32% ஹாஸ்பிடல்களில் மட்டுமே வசதிகள் இருப்பதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் தேசிய திட்ட அமைப்பு தான் இப்படி கூறியிருக்கிறது. கோடை நெருங்கும் நிலையில் இப்படி அறிக்கை வந்தால் எப்படி?
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பாெதுச் செயலாளர் இபிஎஸ் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்து காணொலி வாயிலாக கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது ரயில் தண்டவாளம் அமைக்கப்படுவதால் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று காலை முதல் மாலை 4.10 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோவிலும், பஸ்களிலும் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தாம்பரம், கிண்டி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.