India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நாளை கூடுகிறது. இதில் திமுக எம்பிக்கள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சம்மரில் இந்த முறை வெயில் பயங்கர உக்கிரமாக இருக்குமாம். அதனால், வயதானவர்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வெளியே வராமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஹீட் ஸ்ட்ரோக்கால் உடல்நலம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க இளநீர், நன்னாரி, எலுமிச்சை சாறு என இயற்கையான ஜூஸ்களை நிறைய குடித்தாலே போதும், கோடை காலத்தை குளு, குளுவென ஓட்டிவிடலாம்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு வலி காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக் போன்ற கோடைகால உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஹாஸ்பிடல்களில் போதிய வசதிகள் இல்லை என்ற தகவல் வியர்க்க வைத்திருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த இந்தியாவிலும் 32% ஹாஸ்பிடல்களில் மட்டுமே வசதிகள் இருப்பதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் தேசிய திட்ட அமைப்பு தான் இப்படி கூறியிருக்கிறது. கோடை நெருங்கும் நிலையில் இப்படி அறிக்கை வந்தால் எப்படி?
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பாெதுச் செயலாளர் இபிஎஸ் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்து காணொலி வாயிலாக கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது ரயில் தண்டவாளம் அமைக்கப்படுவதால் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று காலை முதல் மாலை 4.10 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோவிலும், பஸ்களிலும் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தாம்பரம், கிண்டி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்பு கொடி கட்டி பறந்த நடிகர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர். அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், எப்போதாவது செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தலையில் முடிகொட்டி பரிதாபமாக இருந்தார். பரபரப்பாக முன்பு இருந்த டி.ராஜேந்தர், மெதுவாக நடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ₹7,940க்கும், 1 சவரன் தங்கம் ₹63,520க்கும் விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் ₹8,040க்கும், 1 சவரன் ₹64,320க்கும் விற்பனையாகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் 1 கிராம் தங்கம் விலை ₹100ம், 1 சவரன் ₹800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 1 கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹108க்கும், கிலோ ₹3,000 அதிகரித்து ₹1.08 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
டாஸ்மாக் தலைமையகத்தில் 3 நாட்களாக அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்றுடன் நிறைவடைந்தது. இந்த சோதனையில், 4,829 டாஸ்மாக் கடைகளின் பரிவர்த்தனை விவரம், பார் லைசென்ஸ் விவரம், 2020ம் ஆண்டு முதல் செய்யப்பட்ட கொள்முதல் குறித்த கணக்கு விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர். சில கடைகளில் மட்டும் QR Code முறையில் விற்பனை அமலாகி இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா – நியூசிலாந்து இடையே நடக்கும் இன்றைய பைனல் போட்டியை மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் app மூலம் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். அதே போல், டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் போட்டியை ரசிக்கலாம். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை இந்தியா கையில் ஏந்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.