India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக எந்தவொரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் கிடந்ததில்லை என இபிஎஸ் கூறியுள்ளார். பாஜக நோட்டா கட்சி, அதனுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றவர்கள், இன்று கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த இபிஎஸ், அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை என கூறியுள்ளார். கூட்டணிக்காக தவம் கிடந்த சரித்திரம் அதிமுகவிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
பிரபல பாடகரும், கிதார் கலைஞருமான டி வெய்ன் விகின்ஸ் (64) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். கடந்த ஒரு வருடமாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 1980 மற்றும் 90களில் ஆதர்ச இசை நாயகனாக இருந்த அவரின் மறைவு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது. அவரின் R&B இசைக்குழுவில் 80களின் உருவான பாடல்கள் இன்றளவிலும் இளைஞர்களுக்கு தேசிய கீதமாகவே உள்ளது.
தமிழக அரசியலில் TVK, திமுகவுக்கு எப்போதும் போட்டியாக முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். TVK-வை அரசியல் கட்சியாக பார்க்கவில்லை என்றும், தாங்கள் எப்போதும் அரசியல் கட்சிகளுடன் மோதிப் பழக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை ஏமாற்ற எத்தனை விழாவுக்கு சென்றாலும் ஏமாற்ற முடியாது என்றும், நண்பன் யார் எதிரி யார் என அவர்களுக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் சாடியுள்ளார்.
பெங்களூரில் வீட்டு வாடகை வேகமாக உயர்வதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப வெளிமாநிலம், வெளிநாடுகளில் பலர் வேலை செய்து வருகின்றனர். அதிலும் IT Hub ஆன பெங்களூருவுக்கு தமிழக இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். தற்போது, மாத சம்பளத்தை விட வீட்டு வாடகை உயர்ந்திருக்கும் தகவல் அவர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
துபாயில் நாளை நடைபெறவுள்ள CT இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மழையின் காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ பாதிக்கப்பட்டால் ICC விதிப்படி அடுத்த நாள் (மார்ச் 10) மீண்டும் நடத்தப்படும். அன்றைய தினமும் போட்டி நடைபெறாமல் போகும்பட்சத்தில், இந்தியா- நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன்ஸ் டிராபி பகிர்ந்து அளிக்கப்படும்.
கூகுள் நிறுவனத்தின் தலைவரே இருமொழிக் கொள்கையில் படித்தவர்தான் என திமுக MP தயாநிதி மாறன் கூறியுள்ளார். வடமாநிலத்தவர்களுக்கு மும்மொழிக் கொள்கை இல்லாத போது, தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எந்த மொழிக்கும் எதிரான கட்சி இல்லை என்றும், இதுவரை 2 மொழிகளில் படித்துதான் தமிழக மாணவர்கள் பலதுறைகளில் சாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் 4 மாத இடைவெளிக்குள் இந்தியாவுக்கு இன்னொரு உலக செஸ் சாம்பியன் கிடைத்திருக்கிறார். அவர் தான் கிராண்ட் மாஸ்டர் பிரனவ் வெங்கடேஷ். பெட்ரோவாக் உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில், ஸ்லோவேனியாவின் மேடிக்கை வீழ்த்தி பட்டம் பெற்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் டிரா செய்து புதிய செஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார். அவரை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்தியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்.
சிறுமி உதட்டை தொடுவது போக்சோ குற்றமில்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி அருகே படுத்தது, உதட்டை அழுத்திய விவகாரத்தில், போக்சோவின் கீழ் பதிவான வழக்கை எதிர்த்து ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் தீர்ப்பளித்த ஐகோர்ட், சிறுமிக்கு இது கண்ணியக் குறைவே, எனினும், பாலியல் எண்ணமில்லாமல் இதை செய்வது போக்சோ வரம்பிற்குள் வராது என தெரிவித்தது.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான HYUNDAI, சூப்பர் டிலைட் மார்ச் என்ற பெயரில் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி, வென்யூ மாடல் கார்களுக்கு ரூ.55,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எக்ஸ்டர் மாடலுக்கு ரூ.35,000 வரையும், ஐ 20 மாடலுக்கு ரூ.50,000, கிரான்ட் ஐ 10 நியோஸ் மாடலுக்கு ரூ.53,000 வரையும் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கிரெட்டா மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கவில்லை.
உடல்நலக் குறைவு காரணமாக தனக்கு ஆபரேஷன் நடைபெற்றதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறிய அவர், கடந்த 2 மாதங்களாக முழங்கால் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். வலி நிவாரணி மாத்திரை, முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவை எடுத்து சமாளித்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. இதனால் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.