News March 8, 2025

இந்தியாவுக்கு இன்னொரு செஸ் சாம்பியன்

image

செஸ் விளையாட்டில் 4 மாத இடைவெளிக்குள் இந்தியாவுக்கு இன்னொரு உலக செஸ் சாம்பியன் கிடைத்திருக்கிறார். அவர் தான் கிராண்ட் மாஸ்டர் பிரனவ் வெங்கடேஷ். பெட்ரோவாக் உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில், ஸ்லோவேனியாவின் மேடிக்கை வீழ்த்தி பட்டம் பெற்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் டிரா செய்து புதிய செஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார். அவரை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்தியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்.

News March 8, 2025

சிறுமி உதட்டை தொடுவது குற்றமில்லை: டெல்லி ஐகோர்ட்

image

சிறுமி உதட்டை தொடுவது போக்சோ குற்றமில்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி அருகே படுத்தது, உதட்டை அழுத்திய விவகாரத்தில், போக்சோவின் கீழ் பதிவான வழக்கை எதிர்த்து ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் தீர்ப்பளித்த ஐகோர்ட், சிறுமிக்கு இது கண்ணியக் குறைவே, எனினும், பாலியல் எண்ணமில்லாமல் இதை செய்வது போக்சோ வரம்பிற்குள் வராது என தெரிவித்தது.

News March 8, 2025

கார்கள் விலையில் தள்ளுபடி.. HYUNDAI அறிவிப்பு

image

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான HYUNDAI, சூப்பர் டிலைட் மார்ச் என்ற பெயரில் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி, வென்யூ மாடல் கார்களுக்கு ரூ.55,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எக்ஸ்டர் மாடலுக்கு ரூ.35,000 வரையும், ஐ 20 மாடலுக்கு ரூ.50,000, கிரான்ட் ஐ 10 நியோஸ் மாடலுக்கு ரூ.53,000 வரையும் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கிரெட்டா மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கவில்லை.

News March 8, 2025

நடிகை ராதிகாவுக்கு ஆபரேஷன்

image

உடல்நலக் குறைவு காரணமாக தனக்கு ஆபரேஷன் நடைபெற்றதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறிய அவர், கடந்த 2 மாதங்களாக முழங்கால் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். வலி நிவாரணி மாத்திரை, முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவை எடுத்து சமாளித்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. இதனால் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

News March 8, 2025

லண்டனில் இந்தியாவின் இசை ‘ராஜா’

image

யார் என்னை திட்டினாலும் கவலையில்லை. எனது வேலையை செய்து கொண்டே இருப்பேன்… இந்த வாக்கியத்தை இசைஞானி இளையராஜா சொல்லி இருக்கிறார்; இசை மேதை மொசார்ட்டும் பயன்படுத்தி இருக்கிறார். தற்போது அவர் வரிசையில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்யப் போகிறார் இளையராஜா. அதற்காக லண்டனின் அப்போலோ அரங்கம் அவரது பெயர் தாங்கி தயாராகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு சிம்பொனி ஒலிக்கப் போகிறது.

News March 8, 2025

சிரியாவில் மீண்டும் சண்டை.. 235 பேர் பலி

image

சிரியாவில் கிளர்ச்சிப் படையினர் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கு சண்டை கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் அசாத்தின் ஆதரவாளர்கள் அண்மையில் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக கடற்கரையையொட்டிய கிராமப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அரசு ஆதரவு படை தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை 235 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 8, 2025

பாஜகவின் நாடகம் தமிழகத்தில் எடுபடாது: சேகர்பாபு

image

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை, மக்களே வெகுண்டெழுந்து எதிர்க்கும் நிலை உருவாகும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற துணிவில்லாத தமிழக பாஜகவினர், கையெழுத்து இயக்கம் என நாடகம் போடுவதாகவும் விமர்சித்துள்ளார். பாஜகவின் தந்திரத்தை தமிழக மக்கள் நன்கறிவார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

News March 8, 2025

BREAKING: 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 11ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது.

News March 8, 2025

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையைக் கேட்கும் ஆண்களுக்கு சிறந்த சிந்தனைத் திறன் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்களின் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் தங்களின் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கொஞ்சம் கேளுங்க பாஸ்!

News March 8, 2025

மகளிர் தின ஸ்பெஷல்: பெண் காவலர்களுக்கு லீவு

image

மகளிர் தினத்துக்காக மதுரை மாநகர பெண் போலீஸ்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கி போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பெண்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!