India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது. விண்வெளி முதல் அணு விஞ்ஞானம் வரை பெண்கள் அதிகாரமிக்கவர்களாக உருவெடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அந்த டூடுல் அமைந்துள்ளது. சர்வதேச தலைவர்களும் மகளிர் தினத்துக்காக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். பெண்களுக்கான மரியாதை ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கிடைக்க வேண்டும். உங்கள் கருத்து என்ன?
ஒரே போஸ்டால், Swiggyஐ நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த போஸ்டை கவனியுங்கள்.. டீயுடன் மேகியா? அல்லது டீயில் மேகியா? என Swiggy பதிவிட, கொதித்து விட்டனர் டீ பிரியர்கள். ‘இத்துடன் Swiggyஐ டெலிட் செய்கிறேன்’ என சிலரும், ‘இது வயிற்றை கலக்கும்’ என சிலரும் கமெண்ட்களை கொட்டி வருகின்றனர். சில நாள்கள் முன்பு கூட, மேகி X டீ வீடியோ வெளியாகி நெட்டிசன்களை அலற வைத்தது. நீங்க எந்த டீம்!
சிரிக்கும் நோயால் அவதிப்படுவதாக நடிகை லைலா வேதனை தெரிவித்துள்ளார். விக்ரமின் பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லைலா. அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னால் ஒரு நிமிடம் கூட சிரிப்பை அடக்க முடியாது என்றும், அப்படி மீறி அடக்கினால் கண்களில் இருந்து கண்ணீர் வழியும் என்றும் தெரிவித்துள்ளார். பிதாமகன் சூட்டிங்கில் 1 நிமிடம் சிரிக்காமல் இருக்க முடியுமா என விக்ரம் சவால் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் X பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ் பெண்ணும், செஸ் வீராங்கனையுமான வைஷாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தையொட்டி அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான இவர், பிரதமரின் சமூகவலைதள கணக்குகள் தன் வசம் வந்திருப்பது மிகுந்த பெருமையான விஷயம் என பூரிப்படைந்துள்ளார். பிரக்ஞானந்தாவும் சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ED அனுப்பிய சம்மனை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) சார்பாக பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த வழக்கில் இருந்து கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கில் தற்போது ED அனுப்பிய நோட்டீஸை ஐகோர்ட்டும் ரத்து செய்துள்ளது.
ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. மாதந்தோறும் ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் அரசால் நடத்தப்படுகிறது. இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் இன்று உணவு பொருள், நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
உணவுப் பொருட்கள் விலை 5% கீழ் குறைய வாய்ப்புள்ளது என யூனியன் வங்கி கணித்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதத்திற்குப் பின் முதல் முறையாக இந்த வீழ்ச்சி காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 4.31% இருந்த நுகர்வோர் நிலை குறியீடு பிப்ரவரியில் 3.94% ஆக குறைந்துள்ளது. வெங்காயம், உருளை, தக்காளி விலை குறைந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமையல் எண்ணெய், சர்க்கரை விலை ஏறுமுகத்திலேயே உள்ளது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ. 8,040க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.64,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1.08 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. SHARE IT.
மகளிர் தினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னையாக, ஆசிரியையாக, சகோதரியாக, மகளாக, தோழியாக என வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தனது X பக்கத்தில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தமிழகத்தில் பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.