India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CT இறுதிப்போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார். அவருடைய ஓவரில் விக்கெட் இழப்பை தடுக்கவும், ரன் குவிப்பது தொடர்பாகவும் வீரர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சை NZ வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்றாலும், தாங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் <<15631267>>ஹேக்மேன்<<>>, மனைவி அமெரிக்க வீட்டில் பிப்.26ஆம் தேதி சடலமாக கிடந்தனர். 2 பேரின் உடல்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஹேக்மேன் இதய நோயால் இறந்ததும், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மனைவி ஹான்டாவைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி மரணித்ததும் தெரிய வந்துள்ளது. இதயநோய் தீவிரம் அதிகம் இருந்ததால் மனைவி இறந்தது ஹேக்மேனுக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வெளியுறவு விவகாரங்களில் அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. உக்ரைனுக்கான உதவிகள் நிறுத்தம், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என அதிரடி காட்டி வரும் டிரம்ப், அடுத்ததாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்று கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தப்பட்ட ₹80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தகவலின்பேரில் நடுக்கடலில் கப்பலை மறித்த அதிகாரிகள், அதில் 30 கிலோ அளவுக்கு ‘ஹசீஸ்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதில், துறைமுக பணியாளருக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 11 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சாதி பார்த்து கட்சியில் வேட்பாளர்களை போடுவதாகவும், சாதியை திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக கட்சியை சீமான் கொண்டு செல்வதாகவும் ஞானசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்பரிவார் அமைப்புகளோடு கைகோர்த்து, பெரியார் vs பிரபாகரன் என நேர் எதிராக நிறுத்தும் சீமானோடு, தன்னால் இனி பயணம் செய்ய இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி உலக தரத்திலான வீரராக மாறி வருவதாக முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். டி20, ODI போட்டிகளில் வருண் சிறப்பாக பந்துவீசுவதாகவும், கேரம் பால்களை மிகவும் கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும் வீசுவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும், இதற்கு தொடக்கமாக நடப்பு CT தொடர் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
1909, பிப். 28ல் நியூயார்க்கில் அமெரிக்க சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்த ‘மகளிர் தினம்’ தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பதிப்பு. 1917 ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, விளாடிமிர் லெனின் 1922ல் மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாக அறிவித்தார். அது சோசலிச, கம்யூனிச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1977ல் ஐக்கிய நாடுகள் சபையால் இது உலகளாவிய தினமாக மாறியது.
ஓராண்டுக்கான MCLR வட்டியை 9.75% இல் இருந்து 9.60%ஆக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி குறைத்துள்ளது. இதேபோல், RLLR உடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 9.45%இல் இருந்து 9.25%ஆகவும் அந்த வங்கி குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கியில் பெறப்பட்ட வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. RBI ரெப்போ வட்டியை குறைத்ததும், எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்டவை வட்டியை குறைத்தன.
ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசிய அவர், ஆங்கிலம் அடிமை மொழி, அதனை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் கற்கலாம் என்றார். நம்மை இத்தனை ஆண்டுகாலம் அடிமைகளாக வைத்திருந்த ஆங்கில மொழியை கற்பதை பெருமையாக நினைக்கக்கூடாது என்றும், தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.