India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம்(OICL), அசிஸ்டென்ட் (Class III) பதவிகளில் உள்ள 500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. குறைந்தபட்ச <
சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.
சிம்பு – வெற்றி மாறன் இணைந்துள்ள புதிய படத்தின் புரோமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. இதனிடையே பேட்டி ஒன்றில் படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் உடனடியாக ஆரம்பிக்க போவதாகவும் அப்டேட் கொடுத்து சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
ஜூலை 15-ம் தேதி முதல் சுமார் 12 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், தகுதியுள்ள அனைவரும் ₹1,000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். நீங்க விண்ணப்பித்து விட்டீர்களா?
மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள்தான் என்றும் அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான் எனவும் சாடியுள்ளார். தமிழக அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருப்பதாகவும் குறை கூறியுள்ளார்.
டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!
CBSE 9-ம் வகுப்பில் புத்தகம் பார்த்து தேர்வுகளை எழுத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடத் தேர்வுகளை பார்த்து எழுதலாம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 2020-ல் தேசிய கல்வி கொள்கையில்(NEP) பரிந்துரை செய்யப்பட்டது. உங்கள் கருத்து?
குழந்தைகளை புரிந்துகொள்ள நாம் முயற்சிப்பதே இல்லை. மாறாக, அவர்கள் தான், நம்மை புரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இதனாலேயே குழந்தைகளை எப்போதும் குறை சொல்கிறோம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை எப்போதாவது காதுகொடுத்து கேட்டிருக்கிறீர்களா? அவர்கள் கூறும் சிறிய விஷயங்களை இப்போது நீங்கள் கேட்காவிட்டால், பின்னர் பெரிய விஷயங்களை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.
நிச்சயம் ஒருநாள் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் நிச்சயம் விருது கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஒரு படத்துக்கு கதை நன்றாக இருந்தால் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமையும் எனவும் சமீபத்தில் தான் நடித்த ‘குட் பேட் அக்லி’, ‘அந்தகன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.