India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
நகைச்சுவை நடிகர் கிங்காங் என அழைக்கப்படும் சங்கர், தமிழ், மலையாளம் உட்பட 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் திருமணம் அசோக் பில்லர் பகுதியில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் தமிழிசை, ஜெயக்குமார் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
TN-ல் இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102°F, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், குடை, தண்ணீர் பாட்டில் உடன் எடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வீட்டில் பூஜை செய்ய ஏதோ ஒரு தடங்கல் ஏற்படுகிறது என்றால், அது கர்மவினையே காரணம் என்கின்றனர். அதிலிருந்து விடுபட்டு, கடவுளை முழு மனதுடன் பூஜிக்க இந்த திரிகரண சுத்தி உங்களுக்கு உதவும். வீட்டில் கடவுளை வழிபடும் போது, கைகளால் புஷ்பங்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை பாட, தூய எண்ணங்களோடு வழிபட வேண்டும். இடையூறுகள் இருப்பினும் மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வழிபடுங்கள். SHARE IT.
இபிஎஸ், பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாக மாறிவிட்டார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர், கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சியை நடத்தியதாகக் கடுமையாக விளாசினார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று கூறும் கூட்டத்துடன் சேர்த்த அவர், எந்தப் பயணம் போனாலும் இறுதியில் இலக்கை அடைய மாட்டார் என விமர்சித்தார்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான B.Pharm 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. D.Pharm படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் <
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தானேவில் உள்ள RS தமானி பள்ளியில் நடந்துள்ளது. கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் அதனை செய்தது யார் என்பதை அறிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா இருவரும் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் பெண்களா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர்.
நல்ல தூக்கம் மட்டுமின்றி, காலையில் செய்யும் ஒரு சில விஷயங்கள், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
*வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும் *சுறுசுறுப்பாக இருக்க, உடற்பயிற்சி செய்யுங்க *தியானம், மன அமைதிக்கு உதவும் *எந்த காரணத்திற்கும் டிபனை உட்கொள்ளாமல் இருக்க வேண்டாம். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <
Sorry, no posts matched your criteria.