India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது. அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் திறக்கப்பட்டு இருக்கும். வழக்கம் போல வேலைநாளாக கருதப்பட்டு, பத்திரப்பதிவுகள் நடைபெறும்.
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்
பொருள்:
ஓம், தாமோதரனை தியானிப்போம்!
ருக்மணியிடம் லீலை செய்தவனே!
கிருஷ்ணா, என் மனதை ஒளிரச் செய்யுங்கள்!
லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்க முயன்றது UK அரசின் அலட்சியத்தை காட்டுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து மட்டுமே அந்நாட்டின் நேர்மையை கணிக்க முடியும் எனவும், பிரிட்டனில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில், காலிஸ்தானிகளின் மிரட்டல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.
காலை உணவு என்பது உடல் ஆரோக்யத்திற்கு முக்கியமான ஒன்று. அதைத் தவிர்த்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, வளர்சிதை மாற்றம், செரிமானம் சார்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என கூறுகின்றனர். மேலும், அல்சர், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும். எனவே, காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் உணவை உண்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர்.
பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசால் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மகளிர் தினமாகும். ஆதலால் வழக்கமாக செலுத்தப்படுவது போல 15ஆம் தேதி அல்லாமல் முன்கூட்டியே இன்று வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியத்திற்குள் இது தெரிய வந்துவிடும்.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வர்த்தகச் சான்றிதழ்களை பெறவில்லை என கூறி, நாடு முழுவதும் உள்ள OLA ஷோரூம்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். பதிவு செய்யப்படாத வாகனங்களை காட்சிப்படுத்த, டெஸ்ட் ரெய்டு வழங்க இச்சான்றிதழ் கட்டாயம் என்பதால், சான்றிதழ் இல்லாத ஷோரூம்களை அதிகாரிகள் மூடியதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தாங்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறுவது தவறானது என OLA விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று நுரையீரல் பரிசோதனை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், CT ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகளுக்கு பிறகு அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது வழக்கமான பரிசோதனைதான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா இன்று லண்டனில் நடத்த உள்ளார். வேலியன்ட் என்ற தலைப்பில் தான் இயற்றியிருக்கும் சிம்பொனியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக நடத்த உள்ளார். இதன் மூலம், இந்திய இசை மரபை கலக்காமல், மேற்கத்திய செவ்வியல் இசை மரபின் தூய சிம்பொனியை அமைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை அவர் இன்று படைக்க இருக்கிறார். இசைஞானியை வாழ்த்தலாமே ஃப்ரண்ட்ஸ்.
மத்திய அரசு அறிவித்த படி, மணிப்பூரில் இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்பட உள்ளது. ஆனால், மலைப்பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் (அ) யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க பழங்குடி அமைப்புகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
ICCயின் நாசகார விதிகளால் ODI கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக முன்னாள் ENG வீரர் கருத்து தெரிவித்துள்ளார். பவர்பிளே முடிந்த பின்னரும், ஒரு ஃபீல்டரை சர்கிளுக்குள் நிறுத்தலாம் என்ற விதி இருப்பதாலும், டி20 போட்டிகளின் வருகையாலும் ODI அந்த நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். டி20யில் விளையாடுவதற்காகவே, வீரர்கள் ODIயில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.