India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி காண்பித்த ஆவணம் தேர்தல் அலுவலர் வழங்கியது இல்லை என கர்நாடக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் இருமுறை வாக்களித்ததாக கூறும் ராகுல், ஆவணங்களை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகள், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 11, 12 தேதிகளில் இருநாட்டு கடற்படைகளும், 60 கடல்மைல் தொலைவில் இப்பயிற்சிகளை மேற்கொள்ளும். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாக்., எல்லையருகே இந்திய கடற்படை நடத்தும் முதல் பயிற்சி இதுவாகும். எனினும், இது வழக்கமானது தான் எனக் கூறப்படுகிறது.
*காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. *காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. *இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
மாஸ்டரில் தொடங்கிய லோகேஷ் அனிருத் கூட்டணி வெற்றிகரமாக ‘கூலி’ வரை தொடந்து வருகிறது. இதனிடையே அனிருத்துடன் இருக்கும் போட்டோக்களை லோகேஷ் X-ல் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறை நாம் இணையும் போதும் சரவெடியாகதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த எனது தம்பி அனிருத் என்றும் தொடர்ந்து கலக்குவோம் Rockstar எனவும் குறிப்பிட்டுள்ளார். கூலியிலும் இந்த கூட்டணி ஜெயிக்குமா?
நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
SC-யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவை தொகையையும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவிட்டுள்ளது. 2024 கணக்கின்படி, தமிழக அரசு ₹87,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.
T20-யில் தான் கம்பேக் கொடுக்க கம்பீர்தான் காரணம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் டக் டவுட் ஆகி சோகமாக இருந்த போது கம்பீர் தன்னிடம் பேசியதை, சஞ்சு அஸ்வினுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார். நீங்கள் 21 டக்கவுட் ஆனால்தான் அணியில் இருந்து நீக்குவேன் என அவர் சஞ்சுவிடம் கூறினாராம். கம்பீரின் அதீத நம்பிக்கையால் சஞ்சு அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தியும் இருந்தார்.
அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் கருணாஸ் மகன் கென். வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் கென் கருணாஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கென், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்நிலையில் கருணாஸ் தயாரிக்க, கென் ஒரு படத்தை இயக்க போகிறாராம். விரைவில் அறிவிப்பு வருமாம்.
சிக்கன் இறைச்சியை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்: உங்கள் எலும்புகளும் தசைகளும் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனநிலை சீராகும். அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி, இன்பெக்ஷன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.
சத்தான உணவான சிக்கனை அளவாக சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 100 – 120 கிராம் என வாரத்துக்கு மூன்று நாள்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. சிக்கனின் மேல்தோல் நீக்கினால், ஓரளவு கொழுப்பை குறைக்கலாம். சிக்கனின் மார்பு பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. Fried டிஷ்களைவிட, வேக வைக்கப்பட்ட டிஷ்கள் நல்லது. வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.
Sorry, no posts matched your criteria.