India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CT ஃபைனலில் 252 ரன்கள் இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 ரன்னில் அவுட் ஆக, நிதானமாக விளையாடி ஸ்ரேயஸ் ஐயர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2 ரன்னில் அரை சதத்தை நழுவ விட்ட அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தபோது, சான்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து, அக்சர் படேலும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
CBSE 10th மாணவர்கள் தமிழ் தேர்வுக்கு 6 பாடப்பிரிவுகளை மட்டும் படித்து தேர்வெழுதிய நிலையில், சமச்சீர் கல்வி மாணவர்கள் 9 பாடப்பிரிவுகளை படித்தனர். இதனால், மாணவர்கள் அவதிப்படுவதாகவும், CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக பாடப் பிரிவுகளை குறைக்கவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ஒன்பது பாடப்பிரிவுகள் 7-ஆக குறைக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பம், ஆளுமை பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் திருமணத்திற்குப் பிறகு மணமகள் 7 நாட்கள் ஆடை அணிய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம்! இந்த தனித்துவமான பாரம்பரியம் இமாச்சலப் பிரதேசத்தின் மணிகரன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பினி கிராமத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சடங்கு கிராமவாசிகளின் வலுவான நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில், மணமகனும், மணமகளும் எந்த தொடர்பும் கொள்ளமாட்டார்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள Diet கடைபிடிக்கும் பழக்கம், இளம் தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. இது பயனுள்ளது என்றாலும், சரியான முறையில் Diet இருப்பது அவசியம். கேரளாவில் உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து உணவுப் பழக்கத்தை மாற்றிய 18 வயது பெண், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடல் சுருங்கி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். Diet கடைபிடிக்கும்போது கவனம் தேவை நண்பர்களே!
வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் மஸ்க், ஜெலன்ஸ்கியை வம்புக்கு இழுப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் காலியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
இந்தாண்டில் இதுவரை இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இன்றைய போட்டி தவிர அனைத்திலுமே எதிரணியை ஆல்-அவுட் செய்து இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அக்ஷர், ஜடேஜா போன்ற பலம் வாய்ந்த பவுலர்களால் இது சாத்தியப்பட்டது. ஆனால், NZக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா ஆல்-அவுட் செய்யத் தவறிவிட்டது. NZ 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கத்தை சேர்ந்த சங்கரின் மனைவி செல்வராணிக்கும், குமரேசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால், குமரேசன் உடனான உறவை செல்வராணி துண்டித்துள்ளார். உறவுக்கு அழைத்தும் வரவில்லை. இந்நிலையில் நைசாக பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று செல்வராணியை குமரேசன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பிரபல நடிகை அபிநயாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. தனது வருங்கால கணவரும், தானும் நிச்சயதார்த்தம் முடிந்து, கோயிலில் மணி அடிக்கும் அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது பால்யப் பருவ நண்பரை விரைவில் திருமணம் முடிக்கப் போவதாக அண்மையில் பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். நடிகை அபிநயாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச் 10) விடுமுறை ஆகும். அதேபோல், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நடைபெறும் பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.