India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்போரது UPI சேவைகள் இன்று மதியம் முடங்கியதால் கடும் அவதியுற்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை UPI சேவைகள் செயல்படவில்லை. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டிருக்கும் SBI வங்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக UPI சேவைகள் முடங்கியுள்ளதால், மாறாக UPI Lite சேவைகளை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்குப் பின் சேவைகள் சீரானது.
450 பயணிகளுடன் <<15724354>>ரயிலை<<>> கடத்தி பாகிஸ்தானை BLA அலறவிட்டுள்ளது. இந்த அமைப்பு, பலூச் இன மக்கள் வாழும் பகுதிகளை பிரித்து பலுசிஸ்தான் நாடு அமைக்கக்காேரி 2000ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடுகிறது. அதன் தலைவர்களில் பலர் ஆப்கனில் இருந்து செயல்படுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான், தற்போது அதே தீவிரவாதத்திற்கு இலக்காகி வருகிறது.
தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக வழங்குவதே இல்லை. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இரு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் காவிரி நீர் இருப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்து, தமிழ்நாட்டிற்கு மார்ச்- மே வரை மாதந்தோறும் 2.5 டிஎம்சி வீதம் 7.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
‘2K லவ் ஸ்டோரி’ படம் வரும் 14ஆம் தேதி, ஆஹா OTT தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், புதுமுக நாயகன் ஜெகவீர், சிங்கமுத்து G. P.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நவீன இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸானது. சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள WAY2NEWS APPஐ டவுன்லோடு செய்யுங்கள்.
பேனர்கள் வைக்க பொதுமக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கெஜ்ரிவால் உள்ளிட்டாேர் மீது வழக்குப்பதிய டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் கெஜ்ரிவால், பிற ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணை நிலவர அறிக்கையை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க பங்கு சந்தை நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததால், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், ஒரே நாளில் ₹11.33 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. அரசு நிர்வாகத்துடன் தொழிலையும் மேற்கொள்வது கடுமையான சவாலாக உள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் DOGE தலைவராக உள்ள அவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், X, xAI நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’, நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ‘ஸ்டார்லிங்க்’ வழங்கும் இன்டர்நெட் வசதியை ஏர்டெல் விரைவில் வழங்கவுள்ளது. இந்த சேவை கிடைக்கப் பெற்றால், இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம்.
நிறைய Overthink பண்றீங்களா? Overthinking காரணமாக, மனரீதியிலான பிரச்னை மட்டுமின்றி, உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னையும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையில் இருந்து விடுபட தியானம் செய்ய அறிவுறுத்துகின்றனர். வெளிப்படையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என மனநல டாக்டர்கள் சொல்கின்றனர். அதே போல, மியூசிக் பெரிய ஹெல்ப் பண்ணும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
2018- 2021 வரையான நிதியாண்டுகளில், ITR தாக்கல் செய்யாதவர்களின் லிஸ்ட்டை IT துறை ரெடி செய்து வருகிறது. வரி விதிக்கக்கூடிய வருமானம் இருந்தும், ITR தாக்கல் செய்யாதவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதற்காக வங்கி டெபாசிட் உள்ளிட்ட பல ஆவணங்களை IT ஆராய்ந்து வருகிறது. ITR தாக்கல் செய்யாதவர்கள், இனி தாமதத்திற்கான மன்னிப்பு, அபராத நிவாரணத்திற்கான மேல்முறையீடு மட்டுமே செய்ய முடியும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை மட்டும் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 2ஆம் கட்டமாக 1.40 லட்சம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.