India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரம்பரியத்தின்படி தனது தாயும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய <<15726476>>தர்மேந்திர பிரதான் <<>>, கனிமொழி தனக்கு சகோதரி போன்றவர் என்று தெரிவித்தார். தமிழர்களை எப்படி நடத்த வேண்டும் என எனக்கு தெரியும், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என அனைவரும் அறிவர் என்று அவர் பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
மரங்கள் பொதுவாக மனிதனுக்கு சுவாசிக்க ஆக்சிஜனை வழங்கும் தன்மை கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், எந்த மரம் அதிகளவில் ஆக்சிஜன் வழங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆல மரம் தான். அடுத்தடுத்த இடங்களில் அரசமரமும், வேப்பமரமும் இருக்கின்றன. இந்த தகவலை படித்து தெரிந்து கொள்வது மட்டுமின்றி, நீங்களும் ஒரு மரத்தை நட்டு, வரும் சந்ததியினருக்கு உதவுங்கள். SHARE IT.
மொரிசீயஸ் அதிபருக்கு கங்கை நீரை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். மொரிசீயஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலை சந்தித்தார். அப்போது மகா கும்பமேளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட கங்கை நீர், பீகாரை சேர்ந்த மக்கானா உணவு உள்ளிட்டவற்றை பரிசாக மோடி அளித்தார். மொரிசீயஸ் அதிபர் மனைவிக்கு பனாரஸ் பட்டுச் சேலையை அளித்தார்.
CT இறுதிப் பாேட்டியில் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உ.பி.யைச் சேர்ந்த 14 வயது சிறுமி பிரியான்சி பாண்டேக்கு ஹார்ட் அட்டாக் வந்து வீட்டில் சுருண்டு விழுந்துள்ளார். அவரை பக்கத்தில் இருந்தோர் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சிறுமிக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்காது என அவரின் தந்தை கூறியுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்காக, ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, ‘இண்டர்ஸ்டெல்லார்’ படம் இந்தியாவில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு, தொடர்ந்து 7 நாட்கள் திரையிடப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Warner Bros தெரிவித்துள்ளது. படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், கடந்த மாதம் இந்தியாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடைகளுக்கு வணிக லைசென்ஸ் வழங்கும் விதிகளில், பெயர் பலகையில், தமிழ், ஆங்கிலம், 3ஆவதாக ஒரு மொழி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் இல்லை. பிற மொழிகளே உள்ளன. இதை கவனத்தில் கொண்டு தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கவும், லைசென்ஸை முடக்கவும், ரத்து செய்யவும் அரசு ஆலோசிக்கிறது.
சர்ச்சை பேச்சுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழ்நாட்டு எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கோருகிறேன் என கூறினார்.
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்போரது UPI சேவைகள் இன்று மதியம் முடங்கியதால் கடும் அவதியுற்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை UPI சேவைகள் செயல்படவில்லை. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டிருக்கும் SBI வங்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக UPI சேவைகள் முடங்கியுள்ளதால், மாறாக UPI Lite சேவைகளை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்குப் பின் சேவைகள் சீரானது.
450 பயணிகளுடன் <<15724354>>ரயிலை<<>> கடத்தி பாகிஸ்தானை BLA அலறவிட்டுள்ளது. இந்த அமைப்பு, பலூச் இன மக்கள் வாழும் பகுதிகளை பிரித்து பலுசிஸ்தான் நாடு அமைக்கக்காேரி 2000ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடுகிறது. அதன் தலைவர்களில் பலர் ஆப்கனில் இருந்து செயல்படுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தான், தற்போது அதே தீவிரவாதத்திற்கு இலக்காகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.