News March 12, 2025

ராசி பலன்கள் (12.03.2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – ஓய்வு ➤மிதுனம் – நிறைவு ➤கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – நலம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – அசதி ➤விருச்சிகம் – பக்தி ➤தனுசு – லாபம் ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – தனம் ➤மீனம் – களிப்பு.

News March 12, 2025

23 லட்சம் வேலை வாய்ப்பு… AI துறையில் ஜாக்பாட்..!

image

வரும் 2027இல் AI துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என Bain and Company நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த துறையில் வேலைவாய்ப்பு 1.5 – 2 மடங்கு உயரும் எனவும், 2019 முதல் ஆண்டுதோறும் AI தொடர்பான வேலைவாய்ப்புகளும், ஊதியமும் 21% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸி. போன்ற நாடுகளில் AI பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

News March 12, 2025

அரசுப் பஸ்களில் இனி கண்டக்டர் வேலை இல்லை

image

அரசுப் பஸ்களில் இதுவரை டிரைவர்கள், கண்டக்டர்கள் என தனித்தனி ஆட்தேர்வு நடைபெற்றது. இனி நிரந்தர பணிக்கு கண்டக்டர் என தனியாக ஆட்தேர்வு செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. டிரைவர், கண்டக்டர் ஆகிய 2 உரிமங்கள் வைத்திருப்போரையே தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எஸ்இடிசியில் 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் பஸ்களில் இம்முறை ஏற்கெனவே உள்ளது. இனி மாநகரப் பேருந்துகளிலும் இது அமலாகவுள்ளது.

News March 12, 2025

இரவில் மழை கொட்டப் போகுது

image

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News March 11, 2025

NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

image

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.

News March 11, 2025

விஜய் இதை செய்ய வேண்டும்… ஹுசைனியின் கடைசி ஆசை

image

விஜய்யின் பத்ரி படம் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஹுசைனி. தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தான் கராத்தே கற்றுக் கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளார். பவன் கல்யாண் அங்கு கராத்தே கற்றதால் அந்த இடத்தை அவர் வாங்க வேண்டும் என ஹுசைனி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய் வீட்டுக்கொரு வில்வித்தை வீரரை உருவாக்க வேண்டும் என்றும் ஹுசைனி கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 11, 2025

NEP விவகாரம்: பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

image

தேசிய கல்விக் கொள்கையை(NEP) முதலில் ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பின்னர் யூ-டர்ன் அடித்ததாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தவறான தகவலைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 11, 2025

குழந்தைகளின் பசி போக்க ஒரு தாயின் போராட்டம்

image

குழந்தைகளை காக்க ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு சிறந்த உதாரணமாக, லண்டனைச் சேர்ந்த மேரியை சொல்லலாம். இவருக்கு 4 குழந்தைகள். 1914ல் கணவர் இறந்துவிட, குழந்தைகளை கவனிப்பது மேரிக்கு சவாலாக இருந்தது. இந்த நேரத்தில் அவர் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, உலகின் அசிங்கமான பெண்ணுக்கான போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கிடைத்த பணத்தை வைத்து, குழந்தைகளின் பசியை போக்கினார்.

News March 11, 2025

நாடாளுமன்ற அமர்வுகள் 13ஆம் தேதி ரத்து

image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 13ஆம் தேதியும் 2 அவைகளிலும் அமர்வுகளையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களவை வருகிற 29ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்த போலீஸ்

image

ம.பி.யின் தேவாஸில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக போலீஸ் அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CT கோப்பையை இந்தியா வென்றதை பட்டாசு வெடித்து இளைஞர்கள் அபாயகரமான முறையில் கொண்டாடினர். அதை தடுத்த போலீசிடம் சிலர் தகாத முறையில் நடந்த வீடியோ பதிவை வைத்து, 9 பேரை பிடித்து, மொட்டை அடித்து முக்கிய வீதிகள் வழியே அழைத்து சென்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

error: Content is protected !!