News March 12, 2025

பெண்ணின் கன்னித்தன்மையை ₹18 கோடிக்கு வாங்கிய நடிகர்

image

UKவை சேர்ந்த லாரா(22) என்ற மாணவி தனது கன்னித்தன்மையை ஏலம் விட, இந்திய மதிப்பில் சுமார் ₹18 கோடியை அவருக்கு ஒருவர் வழங்கியுள்ளார். இவ்வளவு விலை கொடுத்தது ஒரு பிரபல ஹாலிவுட் நடிகராம். தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காவும், கேரியர் கோல்களை அடையவும் பணம் தேவைப்பட்டதால் இவ்வாறு ஏலம் விட்டதாக லாரா தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை எனவும் லாரா தெரிவித்திருக்கிறார்.

News March 12, 2025

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்காவின் ‘Second Lady’

image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபராக பதவியேற்றப் பிறகு தனது முதல் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது பயணமாக இந்தியா வரவுள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா, அமெரிக்காவின் ‘Second Lady’-ஆக இந்தியா வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

தமிழர்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: சு.வெங்கடேசன்

image

பாஜகவின் எதேச்சதிகாரப் போக்குக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். காசித் தமிழ் சங்கத்திற்கு நிதியளிப்பதில் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழகத்துக்கு கல்விக்கு பணம் தருவதில் BJP அரசு காட்டாதது ஏன் எனவும் வினவியுள்ளார். பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும், பகுத்தறிவும் கொண்ட தமிழர்கள் பாஜகவுக்கு செய்ய வேண்டியதை செய்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

News March 12, 2025

சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்வு!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை நேர வர்த்தகப்படி சற்று உயர்வைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 74,270ஆகவும், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,536ஆகவும் வர்த்தகமாகிறது. இதனால், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து ₹87.22 ஆக உள்ளது.

News March 12, 2025

அப்பா என்றால் சிலருக்கு கசப்பு : சந்துரு தாக்கு

image

மத்திய பாஜக அரசை திடமாக எதிர்க்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஒரு தேசம், ஒரு தேர்தல் எனக்கூறி தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ள ஒரு தலைவர் தயாராகி கொண்டிருக்கிறார் என மோடியை விமர்சித்த அவர், மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பவரை அப்பா என்று சொன்னால் என்ன தவறு. அப்பா என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என சாடியுள்ளார்.

News March 12, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 12) சவரனுக்கு ₹360 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,065க்கும், சவரன் ₹64,520க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ₹109க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,09,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் இன்று உயர்வை கண்டுள்ளது.

News March 12, 2025

ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரிய மின்சார வாரியம்!

image

மின் மீட்டர் அமைப்பதற்கான 2ஆவது டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.

News March 12, 2025

டெல்லியில் புதிய சேவை அறிமுகம்

image

டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், படகு சவாரி அறிமுகம் செய்யும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக சோனியா விகார் – ஜகத்பூர் இடையே 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இது கொடுக்கும் என டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லிக்கு படகு சவாரி புதிய அடையாளத்தை கொடுக்கும் என முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.

News March 12, 2025

ரூ.5 கோடி எம்மாத்திரம்…ரூ.18 கோடி கொடுங்கள்: சுப்பராயன்

image

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும் என சிபிஐ MP சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவதாகவும், ஆனால் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிக்கு வெறும் ரூ.5 கோடி நிதி வழங்குவது போதாது எனவும் கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 12, 2025

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல: பரபரப்பு புகார்

image

பிரபல நடிகை சௌந்தர்யா 2004இல் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப்பின், செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். நிலப் பிரச்னையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும், இக்கொலைக்கும் நடிகர் மோகன் பாபுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அரசு அதிகாரிகளிடம் அவர் புகாரளித்துள்ளார்.

error: Content is protected !!