India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர பவுலரான மார்க் வுட், காயம் காரணமாக தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கால் மூட்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால், 4 மாதம் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. இவரை ரூ.7.5 கோடி தொகைக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக புதிய வீரரை தேடும் நிலைக்கு லக்னோ தள்ளப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை விவகாரம் பற்றி எரிந்துவரும் நிலையில், அமைச்சர் துரைமுருகனின் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ‘ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் நாகரிகம். வடக்கே அப்படியல்ல. 5 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது’ என்று பேசியிருக்கிறார்.
தமிழக பள்ளிகளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 41 நாள்களும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 38 நாள்களும் விடுமுறை கிடைக்கும்.
NSE, BSE உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை (மார்ச் 14) ஹோலி பண்டிகை, அடுத்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் என்பதால் 3 நாட்கள் மார்க்கெட் செயல்படாது. புரோக்கிங் நிறுவனங்களும் இந்நாட்களில் வங்கி பரிவர்த்தனை மற்றும் டிரேடிங் செயல்பாடுகளை மேற்கொள்ளாது. வரும் திங்களன்று (மார்ச் 17), ஷேர் மார்க்கெட்கள் வழக்கம்போல செயல்படும்.
<<15749508>>டாஸ்மாக்<<>> அலுவலகம், மது ஆலைகளில் நடத்திய சோதனை தொடர்பாக விளக்கமளித்த அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், டாஸ்மாக்கில் மதுபாட்டில், பார், போக்குவரத்து என அனைத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில் இன்று மும்பை-குஜராத் அணிகள் மோதுகின்றன. பிராபோர்ன் மைதானத்தில் டாஸ் வென்ற GGW அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி, மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ளும். இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? கமெண்ட்ல சொல்லுங்க.
தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.
நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டிய இபிஎஸ், தன்னுடன் விவாதிக்க முதல்வருக்கு திராணி இருக்கிறதா என வினவி இருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இபிஎஸ் உடன் ஒரே மேடையில் விவாதிக்க தான் தயார் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், ‘திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் ரகுபதி, அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என காட்டமாக கூறியுள்ளார்.
இந்தப் பழக்கங்கள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும்: *இரவு நீண்டநேரம் தூங்காமல் இருத்தல் *அதிகம் காபி அருந்துதல் *அடிக்கடி தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல் *மது அருந்துதல் *துரித & பாக்கெட் உணவுகள் எடுத்தல் *விட்டமின் B6, மக்னீசியம் குறைபாடு *உணவில் அதிகம் சர்க்கரை, உப்பு சேர்த்தல் *சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அடக்குதல் *போதுமான தண்ணீர் அருந்தாமல் இருத்தல். SHARE IT.
TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.