India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNல் 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு ₹37,000 கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் ₹875 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
₹675 கோடி மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ₹400 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். கிராமச் சாலைகளை மேம்பாட்டுக்காக ₹2,200 கோடியும், சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ₹2,423 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வரும் குப்பை தேக்கம் பிரச்னைக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சேகரிக்கப்படும் பல லட்சம் டன் திடக்கழிவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பிரமாண்ட ஆலை, தாம்பரம் அருகே அமைக்கப்படவுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ₹1000 பெற்று வருவதாகவும், நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு ₹13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை என 8 மாவட்டங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ₹2 கோடி, 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் பதிப்பிட ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ₹880 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் வரலாறு காணாத வகையில் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது.
மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, கல்வி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு அரசு செயல்படுவதாக பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் எனக் கூறிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளின் பெருமையை உலகறியும் வகையில் 193 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். குறிப்பாக டெல்லி, மும்பை பெங்களூரு, கொல்கத்தாவில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்த ₹2 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
புஷ்பாவின் 2 பாகங்களும் அல்லு அர்ஜுனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றன. இதனால் அவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அவர் அடுத்ததாக அட்லீ மற்றும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அட்லியின் படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.