News March 15, 2025

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது!

image

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட்டாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான மானியம், கரும்பு மற்றும் முந்திரி விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு, பயிர் காப்பீடு, இளைஞர்கள் கால்நடை பண்ணை வைக்க மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News March 15, 2025

இபிஎஸ்-ஐ தவிர்க்கும் செங்கோட்டையன்

image

நேற்று பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் EPS, சட்டசபை வளாகத்தில் அதிமுக MLAக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் EPS-ஐ சந்திப்பதை அவர் தவிர்த்துள்ளார். அண்மையில் விழா ஒன்றில், MGR, ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அன்று முதல் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.

News March 15, 2025

வங்கிக் கணக்கில் வருகிறது பணம்

image

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ₹1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9.30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, நேற்றைய பட்ஜெட்டில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நற்செய்தி கூறியுள்ளார்.

News March 15, 2025

வேலை கிடைக்கும் என்றால் ஹிந்தி படிப்பாங்க: திருமா

image

இருமொழிக் கொள்கை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் பொருத்தமானதாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஹிந்தி படித்தால் வேலைவாய்ப்பு உறுதிப்படும் என்றால், அதனை படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. TNல் உள்ளவர்கள் கூட ஹிந்தி படிப்பர். ம.பி, உ.பி, ராஜஸ்தான் மாநிலங்களின் தாய்மொழியை கடுமையாக சிதைத்துவிட்டதாகவும், ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் சாடினார்.

News March 15, 2025

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

image

TN அரசின் 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில் வேளாண் துணைக்கு ₹42,281 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். தொடர்ந்து, மார்ச் 17 முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

News March 15, 2025

தமிழகத்தில் ஒவ்வொரு நபருக்கும் ₹1.32 லட்சம் கடன்

image

TN அரசின் கடன் வரும் நிதியாண்டில் ₹9.30 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இக்கடனை ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், தலா ஒரு குடும்பத்துக்கு ₹4.13 லட்சம் கடன் இருக்கும். TNல் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில், தனி நபருக்கு கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹1.32 லட்சம் கடன் உள்ளது.

News March 15, 2025

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

image

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

News March 15, 2025

WPL: இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்?

image

இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும், இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளது. ஆல்ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் MI அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. JioHotstar, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையில் காணலாம்.

News March 15, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

▶ கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீ தாங்கித் தாங்கி வலுவைப் பெறு. ▶போட்டியும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. ▶விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது கேடு – பேரறிஞர் அண்ணா.

News March 15, 2025

பட்ஜெட் அதிருப்தி – போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!