India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்திரி, பச்சை மிளகாய், கீரை போன்ற முக்கிய காய்கறிகள் சாகுபடி பரப்பு 14,000 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்கறி தேவையை நிறைவு செய்யும் வகையில் 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் தனியே சந்தித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதிமுக MLAக்களின் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இதனால், இபிஎஸ் தலைமை மீது அவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டது. மேலும், செங்கோட்டையன் தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா? என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில் அவரது நகர்வு, அதிமுகவில் சலசலப்பை அதிகரித்துள்ளது.
கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களுக்காக ₹10.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு டன்னுக்கு ₹349 சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் இதன் மூலம் ஒரு டன் கரும்புக்கு ₹3,500 வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். இதற்காக ₹297 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ₹12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் * 1 லட்சம் ஏக்கரில் ₹12 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் * ₹15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் * ₹146 கோடி செலவில் இந்த ஆண்டும் ‘முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம்’ * ₹269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2,335 ஊராட்சியில் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதிக விளைச்சலைக் காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ₹2.50 லட்சம், 2வது பரிசாக ₹1.50 லட்சம், 3வது பரிசாக ₹1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60% முதல் 70% ஆக உயர்த்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்த ₹52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், எண்ணெய் வித்துகள் இயக்கம் ₹108 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 90,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
₹42 கோடி மதிப்பீட்டில் 1,000 இடங்களில் ‘முதல்வர் உழவர் நலச் சேவை மையம்’ அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க ₹102 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் மற்றும் ₹52 கோடி மதிப்பீட்டில் தரமான விதைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். விவசாயிகள் கோடை உழவு செய்ய ஏதுவாக, ஹெக்டருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும் எனக் கூறிய அவர், இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலமற்ற உழவர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ₹ 1 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இயற்கை மரணத்திற்கான நிதியுதவி ₹ 20,000லிருந்து ₹ 30,000ஆகவும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹ 2,500லிருந்து ₹ 10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
TN சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதையொட்டி திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்தபடி பேரவைக்கு வந்திருந்தனர். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால், அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்ற கருத்துடன் தனது வேளாண் பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார்.
Sorry, no posts matched your criteria.