India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. அது உண்மைதான் என்கிறது போலந்து நாட்டு ஆய்வு. பேச்சிலர் ஆண்களை விட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா.. உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகம்.
பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறியே இதுவரை இல்லை. தமிழக பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாய் திறந்து பேசவேயில்லை. அண்ணாமலை வழக்கம் போல தனது தலைவர் பதவிக்குரிய வேலையை செய்து வருகிறார். இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
ரூ.200 தாள் நிறம் போல ரூ.350 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக படங்களுடன் சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என பிரபல செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அதில் அந்த செய்தி பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.350 நோட்டு தொடர்பாக வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அப்போது, ₹100 கட்டண வரிசையில் நின்றிருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் (50) மூச்சுத்திணறி கீழே சரிந்தார். மருத்துவமனை அழைத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை MP சீட் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால், எந்த வாக்குறுதியும் தரவில்லை என அதிமுக தலைமை தற்போது கூறிய நிலையில், அதற்கு தேமுதிகவினர் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை. 2026 தேர்தல் கணக்கா (அ) வேறு விஷயத்தால் பிரேமலதா பேசத் தயங்குகிறாரா என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
வங்கதேசத்தின் மகுரா நகரில், 8 வயது சிறுமி, தன் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அப்போது அங்கிருந்த அக்காள் கணவரின் சகோதரன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 3 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து, எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என, நீதிகோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். படத்தின் டப்பிங்கிற்காக 50 தடவை பேசச் சொன்னாலும் அஜித் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என லிங்குசாமி தெரிவித்துள்ளார். அஜித்தின் ஜீ படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் பெண்கள், எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் செல்போன் எண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் SMS அனுப்பப்பட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பு கோர்ட்டுகளில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், இபிஎஸ், செங்கோட்டையன் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. 2026 தேர்தல் பணியை அதிமுக தொடங்க இருக்கும் வேளையில், இடியாப்ப சிக்கலாய் அதிகரித்து வரும் பிரச்னை அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நல்லெண்ணத்துடன் பாகிஸ்தானுடன் அமைதிக்கான முயற்சியை இந்தியா எடுத்த போதெல்லாம் துரோகம், விரோதமே மிஞ்சியதாக PM மோடி விமர்சித்துள்ளார். பாக்.உடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பியே, 2014இல் தமது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அப்போதைய பாக். PM நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஞானம் வந்து அமைதிப் பாதைக்கு திரும்பும் என இந்தியா நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.