News March 18, 2025

செங்கோட்டையன், இபிஎஸ் விரிசலுக்கு இது காரணமா?

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு அவரின் ஆதரவாளர்களே முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். ஆனால் அண்மையில் அவர்களை இபிஎஸ் மாற்றியதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையன் மகன் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதுவே விரிசலுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

News March 18, 2025

ராசி பலன்கள் (18.03.2025)

image

➤மேஷம் – செலவு➤ரிஷபம் – ஆதரவு ➤மிதுனம் – ஈகை ➤கடகம் – பெருமை ➤ சிம்மம் – பரிசு ➤கன்னி – உயர்வு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – கவனம் ➤தனுசு – அமைதி ➤மகரம் – வரவு ➤கும்பம் – நிறைவு ➤மீனம் – நஷ்டம்.

News March 18, 2025

உலகமே எதிர்பார்க்கும் சந்திப்பு..!

image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நாளை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 3 ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக் கூடாது என்ற உறுதி மட்டுமே போர்நிறுத்தத்தை சாத்தியப்படுத்தும் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.

News March 18, 2025

மிஸ்ட் கால் மூலம் PF இருப்புத் தொகை அறியும் வசதி

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (PF) இருப்புத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிதில் அறிய முடியும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஆரம்பிக்கும்போது அளித்த செல்போன் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், PF இருப்புத் தொகை குறித்து எஸ்எம்எஸ் உடனே வரும். அதை கொண்டு இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். SHARE IT.

News March 18, 2025

வீட்டில் குழந்தைகள் இருக்கா? அப்போது இது முக்கியம்..

image

கேரளாவில் 3 வயது சிறுமி டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்டை பயன்படுத்தி <<15791111>>உயிரிழந்தாள்<<>>. அதுபோல் பிளீச்சிங் தூள், சோப்பு தூள் போன்றவையும் கூட குழந்தைகளுக்கு எமனாக மாறலாம் என்பதால் அதை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடங்களில் வைப்பது அவசியம். அதேபோல் கத்தி, கத்தரிக்கோல், சிறிய நட்டுகள், பட்டன்கள், சில்லரை காயின்கள் போன்றவையும் அவர்களின் பார்வைக்கு படும்படி வைக்கக்கூடாது. Share it…

News March 18, 2025

உடலுறவு காட்சிகள்.. மனம் திறந்த நடிகை கரீனா கபூர்

image

பிரபல இந்தி நடிகையும், நடிகர் சயீப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர், படங்களில் வரும் உடலுறவு காட்சிகள் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பொதுவாக உடலுறவு காட்சிகள், படத்தின் கதையை முன்னோக்கி கொண்டு செல்லாது என்பது தனது கருத்து என்று கூறியுள்ளார். ஆதலால் அத்தகைய காட்சிகள் தேவையில்லை என தான் கருதுவதாகவும், எனவே தாம் அக்காட்சிகளில் நடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

அண்ணாமலை மீது வழக்கு பதிவு

image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 107 பாஜகவினரை இரவு 7 மணிக்கு தடுப்புக் காவலில் இருந்து விடுவித்த போலீசார், அவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 17, 2025

பெண் முன்பு ஆபாசம்: நாடு எங்கே போகிறது?

image

மே.வங்கத்தில் ரயில் நிலையத்தில் இளம்பெண் முன், இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேகம்பூர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பக்க பிளாட்பாரத்தில் நின்ற இளைஞர் ஒருவர், திடீரென யாரையும் பொருட்படுத்தாமல் இந்த அருவருப்பான செயலை செய்தார். இம்மாதிரி நபர்கள் இருந்தால், நாட்டில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?

News March 17, 2025

திமுகவுடன் கூட்டணியா?- உடைத்து பேசிய பிரேமலதா!

image

தமிழக பட்ஜெட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்ததால் திமுகவுடன் கூட்டணி சேர திட்டமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், தேர்தல் வருவதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

News March 17, 2025

வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

image

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.

error: Content is protected !!