News March 20, 2025

அரசுக் கல்லூரிகளில் 2வது ஷிப்ட் அறிமுகம்

image

TNல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில், 100 இடங்கள் மட்டுமே உள்ள சில படிப்புகளுக்கு 2,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு இந்தாண்டு முதல் 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், 2ம் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஆசிரியர்களை கூடுதலாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News March 20, 2025

நடிகர் வடிவேலுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மதுரை திருப்புவனம் அருகே நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக குப்பைகளை கொட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. பழையூரில் வடிவேலுவுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 6 மாதக் காலமாக அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், நிலம் மாசடைவதாக அவரது உதவியாளர்கள் புகாரளித்தும், நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News March 20, 2025

TNல் சட்டம் ஒழுங்கு மோசம்: ஓபிஎஸ் விமர்சனம்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக, முன்னாள் CM ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு, மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களை வன்முறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும், சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

News March 20, 2025

இசைஞானியை வாழ்த்திய இயக்குனர்கள்!

image

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.

News March 20, 2025

புகார்கள் அதிகரிப்பு: RBI அதிருப்தி

image

வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

GBU வில்லன் இவரா?

image

‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரகுராம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில், வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் மெட்ரோ சண்டை காட்சியில் மாஸ் காட்டியிருப்பார். டெல்லியில் பிறந்த இவர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

News March 20, 2025

அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

image

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.

News March 20, 2025

தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு!

image

தெலங்கானாவில் ரயில்வே லோகோ பைலட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு தமிழக தேர்வர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு மையத்தை மாற்றுமாறு கூறியும் ரயில்வே அதை ஏற்காததால், வேறு வழியின்றி தமிழக தேர்வர்கள் நேற்று நடக்கவிருந்த தேர்வுக்காக ஐதராபாத் சென்றிருந்தனர். ஆனால், அதன் பிறகே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால், தமிழக தேர்வர்கள் அதிருப்தியடைந்தனர்.

News March 20, 2025

போரை நிறுத்தவே 400 பேரைக் கொன்றோம்: இஸ்ரேல்

image

ராணுவ அழுத்தம் கொடுத்து ஹமாஸை அடிபணிய வைக்கவே, 400 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். USA, இஸ்ரேல் தரும் ஆஃபர்களை ஏற்றுக் கொள்வது அல்லது பணயக் கைதிகளை விடுவித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறுவதுதான் அந்த வாய்ப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!