India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா வம்சாவளியான கல்பனா சாவ்லாவின் விண்வெளி பயணம் சோகத்தில் முடிந்தாலும், சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பியது இந்தியர்களுக்கு மகிழ்ச்சி. இந்திய வம்சாவளிகளான இருவரும் நாசாவில் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்குமே சமோசானா அலாதி பிரியமாம். 2006 விண்வெளி பயணத்தின் போதும்கூட சுனிதா சமோசாவையும் எடுத்துட்டு போனாங்கன பாத்துக்கோங்களேன்… உங்களுக்கு சமோசா பிடிக்குமா?
குழந்தைகளுக்கு வழக்கமாக தாய்மார்கள் பாட்டில்ல பால் கொடுக்குறது தான் வழக்கம். ஆனா குழந்தை பிறந்து 6 மாசம் ஆச்சுனா அத நிறுத்திடனும்னு சொல்றாங்க டாக்டர்ஸ். ஏன்னா, பாட்டில்ல பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா ஏற்படுமாம். அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்வதோடு, சீரான உணவுப் பழக்கத்தை பழக்குவது அவசியம்.
எம்புரான் திரைப்படம் அற்புதமான படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். என் அருமை மோகன்லால் மற்றும் பிருத்விராஜின் எம்புரான் திரைப்பட டிரெய்லரை பார்த்தேன். அற்புதமான படைப்பு. வாழ்த்துகள் என X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL திருவிழா வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அண்ணன் தம்பியாக இருந்த ரசிகர்கள் கூட அடுத்த 2 மாதங்களுக்கு எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள். இதனிடையே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 அணி கேப்டன்களும் பங்கேற்றனர். அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருஷம் கப்ப தூக்கப் போறது யாரு?
காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தொடர் வன்முறை காரணமாக ஔரங்கசீப் கல்லறையை தகடுகளை வைத்து தொல்பொருள் துறையினர் மூடியுள்ளனர். ஔரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி மகாராஷ்டிராவில் இந்துத்துவ அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், ஔரங்கசீப் கல்லறையை சுற்றி தற்போது காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மூலம் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாக பெறலாம். இதற்கு 25 ஆண்டுகள் பணியாற்றி இருப்பது அவசியம். 10 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 பென்சன் கிடைக்கும். பணியின்போது ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு 60% ஊதியம் பென்சனாக கிடைக்க UPS வகை செய்கிறது.
தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற பாமக MLA ஜி.கே மணியின் கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக பதிலளித்துள்ளார். திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க அரசு தயாராக இருந்தும், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் போராட்டம் என்ற பெயரில் பாமக தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தருமபுரியில் சிப்காட் அமைக்க கேட்பது பாமகவின் இரட்டை நாக்கை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?
Sorry, no posts matched your criteria.