India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி ஐகோர்ட் ஜட்ஜ் யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து நேரிட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் இருந்த பணக்குவியலை கண்டு மலைத்துப் போயுள்ளனர். ₹11 கோடி தீயில் எரிந்த நிலையில், ₹100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கார்த்திக் என்பவர் முன்வைத்த இந்த கோரிக்கையை ஏற்ற மாமன்றம், தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அஷ்வின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முதல் அணியாக ஜப்பான் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-0 என பக்ரைனை நேற்று வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பைக்குள் நுழைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன.
சூர்யாவின் 45ஆவது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இருவரின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவலில் சூர்யா ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே படத்தின் பாடல் ஒன்றுக்காக 500க்கும் அதிகமான நடன கலைஞர்களுடன் சூர்யா மற்றும் த்ரிஷா ஆட உள்ளனர். சூர்யா படத்தில் இதுவரை இல்லாத பிரம்மாண்டம் இப்படத்தில் இருக்கும் என படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. படம் வந்தாதான் வொர்த்தா இல்லையானு தெரியும்..
கர்நாடக அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைக்க சதி நடப்பதாக, சட்டப்பேரவையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நடுவே, அரசு ஒப்பந்தப்பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, ஆளும் காங்கிரஸ் நிறைவேற்றியது. மசோதா தாள்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24, 25இல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், நாளை 4-ஆவது வார சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாள்கள் வங்கி சேவை பாதிக்கப்படும். எனவே, வங்கி தொடர்பான பிரச்னைகளை இன்று மாலைக்குள் முடித்து விடுங்கள். மேலும், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்வதும் நல்லது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களின் வசதிக்காக புகார் பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,299 ரேஷன் கடைகளில் இந்த பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடந்தாலோ, உணவுப் பொருட்கள் எடை குறைவாக அளந்து விநியோகித்தாலோ மக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். மேலும், 1967, 18004245901 என்ற கட்டணமில்லா எண்களிலும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக திமுக மட்டுமே அதிமுகவிற்கு எதிரி, மற்ற யாரும் (பாஜக) எதிரி இல்லை என இபிஎஸ் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது; மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு எனக் கூறிய அவர், தேர்தல் வரும்போது கூட்டணியை முடிவு செய்வோம் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு BJP- ADMK கூட்டணிக்கு அச்சாரமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இபிஎஸ் வலது கையாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. அதில், இபிஎஸ் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; மீண்டும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்தால், மீண்டும் இணைவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
IPL 2025ல் எந்த அணி வெற்றி பெறும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். * சேவாக்- LSG, * கில்கிறிஸ்ட்- PBKS, * ரோஹன் கவாஸ்கர்- RCB, * பொல்லாக்- MI/SRH * திவாரி- SRH * சைமன் டவுல்- PBKS * எம்பாங்வா- GT * ஹர்ஷா போக்லே, மைக்கேல் வாகன் – MI. எந்த அணி வெற்றி பெறும் என்று நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.