India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநிலங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்த 57,327 பேருக்கு ‘Smart Card’ அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியிருந்த நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் நேற்று நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, உதவி இயக்குநர் ஒருவரை நயன்தாரா திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் டென்ஷனான சுந்தர்.சி, ஷூட்டிங்கை ரத்து செய்ததோடு, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததால், பிரச்னை முடிவுக்கு வந்ததாம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் CM ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும் இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு எனப் பெயரிடவும் பரிந்துரைத்துள்ளார்.
மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான IPL இன்று தொடங்கும் நிலையில், அதன் RULES குறித்து பார்ப்போம். ➤IPL தொடரில் இம்முறை, பந்தில் எச்சில் பயன்படுத்த அனுமதி ➤கூடுதலாக ஒரு மாற்று வீரரை களமிறக்கும் இம்பேக்ட் விதி தொடரும் ➤11 ஓவரில் வேறு பந்தை மாற்றிக்கொள்ளலாம், புதிய பந்துக்கு அனுமதியில்லை ➤அணிகள் தாமதமாக பந்து வீசினால் கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படாது; தகுதி இழப்பு புள்ளி, அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகத்தில் 8 – 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தொகுதிகள் குறைந்தால் நமது பண்பாடு, அடையாளம், முன்னேற்றம், சமூக நீதி ஆபத்தை சந்திக்கும். மாணவர்கள், பெண்களின் வளர்ச்சி தடைபடும். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்புதான் இது என்றார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான மறுசீரமைப்பையே நாங்கள் கோருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல; நமது அதிகாரம். மக்களின் பிரதிநிதிகள் குறைந்தால் நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமையும் குறையும். சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக இந்த மறுவரையறை மாற்றிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு Dy CM உதயநிதி பவர் பாயிண்ட் மூலம் விளக்கினார். மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் முடிவால் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
உ.பி.யில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புவியியல் பேராசிரியரான ரவ்னீத், அதிக மதிப்பெண் போடுவதாக ஆசை காட்டியும், பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டியும் 16 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாணவிகளுடன் தனிமையிலிருந்த பல வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். So Sad!
TNல் கர்நாடகா, கேரள மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை கண்டித்து பாஜக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் தனது இல்லத்தின் முன்பாக போராட்டம் நடத்திய அண்ணாமலை, டாஸ்மாக் ஊழல் நாட்டையே உலுக்கும் என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஸ்டாலின் ஏன் மறுக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார். தமிழிசையும் தனது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.