India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொன்னபோது, உதயநிதி தயக்கம் அடைந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து மாமன்னனில் நடித்தார் எனக் கூறிய மாரி, கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்ற என்னுடைய சினிமா பாணி, இன்றைக்கு பல இயக்குனர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பஞ்சாப் CM பகவந்த் சிங் மான் உறுதியளித்துள்ளார். கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தரும் தண்டனை என விமர்சித்தார். இதனால் TN, பஞ்சாப் மட்டுமின்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களும் பாதிக்கும் என்றார்.
ஊழலை மறைக்க சிலர் (திமுக) மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். பாஜக என்பது பியூஸ் போன பல்பு; அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், திமுகவை மிரட்டி பார்ப்பதுபோல அமித்ஷா பேசுகிறார். அவரின் மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றார்.
நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி ஐதராபாத்தில் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெறும் அடுத்த கூட்டத்திலும் தென்மாநில தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தலைவர்களாகிய நாம் மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தேர்தல் பரப்புரையின்போது தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையும் என PM கூறினார். கோவைக்கு வந்த அமித்ஷாவிடம் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை சாதாரணமாகக் கருதக்கூடாது என குறிப்பிட்ட அவர், தொகுதிகள் குறைந்தால், நம் மாநிலங்கள் தொடர்பான முடிவை மற்றவர்கள் (வட மாநிலங்கள்) எடுப்பார்கள் என எச்சரித்தார்.
ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த <<15844776>>தங்கம்<<>> கடந்த 2 நாள்களாகக் குறைந்துள்ளது. நேற்று ₹320, இன்று ₹320 எனச் சவரனுக்கு ₹640 சரிந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
ஐபிஎல் ஃபீவர் கூகுளையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறது. இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இரு வாத்துகள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் KKR, RCB அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த அணிகள் இடையே நடந்த 34 போட்டிகளில் KKR 20, RCB 14 போட்டிகளில் ஜெயித்துள்ளன. இன்றைய மேட்ச்சில் யார் ஜெயிப்பார்கள்?
மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முக்கியமான கூட்டம் இது என ஒடிசா முன்னாள் CM நவீன்பட்நாயக் பாராட்டியுள்ளார். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய அவர், மாநிலங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், நாட்டில் மக்கள் தொகை பெருகியிருக்கும் என்றார். எனவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே, தொகுதி மறுவரையறை என்று, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக போராடுவோம் என அழைப்பு விடுத்த அவர், BJP நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.