News August 9, 2025

300 கிமீ தொலைவில் பாக்., விமானத்தை வீழ்த்திய இந்தியா

image

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, நம் விமானப்படை தளபதி ஏபி சிங் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக எல்லையில் இருந்து 300 கிமீ தொலைவில், இந்திய விமானங்களை கண்காணித்த AWACS ரேடார் விமானத்தை, ரஷ்ய தயாரிப்பான S-400 வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார். 300 கிமீ தொலைவில் உள்ள விமானத்தை surface-to-air-ல் வீழ்த்தியது ஒரு உலக சாதனையாகும்.

News August 9, 2025

சளி என்று போனால் நாய்கடி ஊசி போடுகிறார்கள்: EPS

image

தற்போது அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸுகள், மருந்துகள் போதியளவில் இல்லை என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், சளி என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடிக்கு ஊசி போடுவதாக விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிரில்லாமல் வருவதாகவும் சாடினார்.

News August 9, 2025

இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

image

‘Bleed lines’ என்ற இந்த கோடுகள் ரூபாய் நோட்டுகளில் ஏன் இருக்கின்றன என தெரியுமா? இவற்றை தேய்த்து தான் கண்பார்வை இல்லாதவர்கள் நோட்டின் மதிப்பை அறிகின்றனர். இந்த கோடுகள் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப கூடும், குறையும். ₹100 நோட்டின் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். அதுவே, ₹200 நோட்டுகளில் 4 கோடுகளுடன் 2 பூஜ்ஜியங்கள் இருக்கும். ₹500 நோட்டுகளில் 5 கோடுகளும், ₹2,000 நோட்டில் 7 கோடுகளும் இருக்கும்.

News August 9, 2025

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?.. இதை பண்ணுங்க!

image

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.

News August 9, 2025

‘கூலி’ மாயஜாலத்துக்கு இவர் தான் காரணம்: லோகேஷ்

image

விக்ரம், கூலி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கிரிஷ் கங்காதரன். இவரை குறித்து லோகேஷ் X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிஷ் உங்களுடன் மீண்டும் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றும், உங்கள் தொலைநோக்கு பார்வை, கடின உழைப்பு, உறுதியான ஆதரவு கூலியில் பெரும் பங்காக இருக்கும் என தெரிவித்துள்ளார். நீங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.

News August 9, 2025

மினிமம் பேலன்ஸ் எப்படி கணக்கிடப்படும்?

image

வங்கிகளின் சேமிப்பு கணக்குக்கான மினிமம் பேலன்ஸ் (MAB) என்பது, மாதத்தின் இருப்புத் தொகையின் சராசரியாகும். மினிமம் பேலன்ஸ் ₹10,000 இருக்க வேண்டுமென்றால், தினமும் ₹10,000 கணக்கில் இருக்க வேண்டியதில்லை. 1-ம் தேதி முதல் மாத முடிவு வரை, தினந்தோறும் உங்கள் அக்கவுன்ட்டின் குளோசிங் தொகைகளை கூட்டி, அதை மாதத்தின் மொத்த நாள்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதே மினிமம் பேலன்ஸ் ஆகும்.

News August 9, 2025

கணவன் காதில் பாய்சன் ஊற்றிய மனைவி

image

தெலுங்கானாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மது அடிமையான சம்பத்துக்கும், மனைவி ரமாதேவிக்கும் எப்போதும் சண்டை தான். தன் கடை வருமானத்திலேயே, ரமாதேவி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடைக்கு வரும் ராஜய்யாவுடன் கள்ள உறவு ஏற்பட, இருவரும் சம்பத்தை கொல்ல முடிவு செய்தனர். உறங்கிக் கொண்டிருந்த சம்பத் காதில், இருவரும் விஷத்தை ஊற்ற, அப்போதே அவர் உயிரிழந்தார். இருவரும் இப்போது கம்பி எண்ணுகின்றனர்.

News August 9, 2025

தனுஷ் உடன் காதலா?.. மிருணாள் தாகூர் விளக்கம்

image

2 நாள்களாக சோஷியல் மீடியாவை திறந்தாலே தனுஷ் – மிருணாள் காதல் விவகாரம்தான் முன்னால் வந்து நிற்கிறது. இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், மிருணாள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், தனுஷ் தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்றும், தங்களை பற்றிய வதந்தி குறித்து தெரிந்தபோது சிரிப்புதான் வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவுதான் பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு!

News August 9, 2025

ATM-ல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம்

image

மாதாந்தர மினிமம் பேலன்ஸை <<17350157>>₹50,000-ஆக<<>> உயர்த்திய ICICI வங்கி, ATM கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. ICICI ATM-களில் முதல் 3 வித்டிராயல் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹23 கட்டணம் விதிக்கப்படும். ICICI கிளைகள் & ATM-களில் பணம் டெபாசிட் செய்யவும் முதல் 3 முறை மட்டும் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹150 (அ) ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹3.5 வீதம்- இதில் எது அதிகமோ, அத்தொகை கட்டணமாக விதிக்கப்படும்.

News August 9, 2025

‘மரணம் அமைதியை கொடுக்கட்டும்’.. விபரீத முடிவு

image

‘நான் இந்த உலகத்திற்காக படைக்கப்படவில்லை. இனி என்னால் இங்கு இருக்க முடியாது. வாழ்க்கையில் நான் காணாத அமைதியை மரணம் கொடுக்கட்டும்’. மேற்குவங்க PhD மாணவன் அனாமித்ரா ராய்(25) தற்கொலைக்கு முன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட வரிகள் இவை. ராகிங் புகார் குறித்து காலேஜ் நிர்வாகத்திடம் கூறியும் பயனில்லை என்பதால் விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

error: Content is protected !!