India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியாயமான சலுகைகளுடன் கூடிய புதிய டோல் கொள்கையை ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கட்டணம் குறித்த கவலைகளை தீர்ப்பதற்கும், சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் ₹64,809 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இது முந்தய ஆண்டை விட 35% அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வரும் தனுஷ், அதன் பின் அஜித்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரிடம் கேட்டபோது, தகவலை மறுக்காத அவர், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் குறித்து அமைச்சர் அறிவித்த பிறகு இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் குவிகின்றன. சுமார் 50 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ளை செய்யும் போதே அரசு நிர்ணயித்த <
400 டி20 போட்டிகளில் விளையாடிய 3ஆவது இந்திய வீரராக கோலி உருவெடுத்துள்ளார். நேற்றைய KKR உடனான போட்டியின் போது, அவர் இந்த சாதனை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா 448, தினேஷ் கார்த்தி 412 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதேபோல், டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கோலி 12,945 ரன்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 14,562 ரன்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்பவே, அண்டை மாநில முதல்வர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையரை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என எப்படி திமுக அரசுக்கு தெரியும் எனவும், அறிவிக்கப்படாததை ஒன்றை வைத்து திமுக விளம்பர அரசியல் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
வங்கியில் ₹13,500 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்சியை நாடு கடத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தனது மனைவியுடன் தற்போது பெல்ஜியமில் வசித்து வருகிறார். கடனை வாங்கிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிய சோக்சி, கரிபீயன் தீவுகளில் வசித்ததாக நம்பப்பட்டது. மேலும், தற்போது பெல்ஜியத்தில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து தோனி களமிறங்க உள்ளதால், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். அதேபோல், இந்த ஒரு போட்டிக்கு மட்டும் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். இந்த போட்டியில் பாண்டியா விளையாடமாட்டார்.
‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் ₹100 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் நிறுவனம் ₹78 கோடி கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளுக்கான வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாம்.
பொதுவாக ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது தான் கடினம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் புத்திசாலி பெண்களுக்கு வரன் கிடைப்பதுதான் மிகவும் கஷ்டம். ஏன் என்றால் அவர்கள் Smart ஆன ஆண்களையே தேடுவார்கள். அதேசமயம் ஆண்களோ தன்னைவிட அறிவாளிகளை விரும்புவது கிடையாது. இதனால் புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது
சிக்கல். புத்திசாலிகள் careerக்கு முக்கித்துவம் கொடுப்பதால் காதலிலும் விழுவதில்லை.
Sorry, no posts matched your criteria.