India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<15844776>>தங்கம்<<>> விலை கடந்த 2 நாள்களாகக் குறைந்த நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் எனப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் 3,050 டாலர்களாக இருந்த 1 அவுன்ஸ் தங்கம் 3,023 டாலராக குறைந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருவதால் இது மேலும் குறையுமாம். அதோடு, பங்குச்சந்தையும் ஏற்றம் காணுவதால் முதலீட்டாளர்களின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
தனது கேரியரை மாற்றிய ‘குஷி’ படம் குறித்து இயக்குநரும், நடிகருமான SJ சூர்யா சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். குஷியின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த யாருக்கும் படம் பிடிக்கவில்லை என்று கூறிய அவர், ஆனால் ரிலீஸ் ஆனதும் பெரிய ஹிட் அடித்ததாக தெரிவித்தார். ஒருவேளை ரிலீஸ் ஆன பிறகும், படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருந்தால், அந்த வலியால் நான் செத்திருப்பேன் என்றார். உங்களுக்கு‘குஷி’ படம் பிடிக்குமா?
மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டேவின் உடல் மும்பையில் உள்ள சாஸ்திரி நகரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 1969இல் சினிமாவில் கால் பதித்த ராகேஷ் பாண்டே 2023 வரை ஈஷ்வர், தேவ்தாஸ், தில் சாஹ்தா ஹை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஏர் இந்தியா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘விமானி இல்லாத போது, விமானத்தில் பயணிகளை ஏற்றி மணிக்கணக்கில் காக்க வைப்பது ஏன் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். அவரின் பதிவு வைரலாக, பெங்களூருவின் மோசமான வானிலை காரணமாக, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா அவருக்கு பதிலளித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வைத்து வரும் வேளையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு (11 மணி வரை) 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணித்துள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சரோஜினியை(55), மரணத்தின் பிடியில் இருந்து டாக்டர்கள் காப்பாற்றுகின்றனர். ஆனாலும், அவருக்கு மரணக்கயிறு, லிப்ட் கயிற்றின் ரூபத்தில் வந்துள்ளது. ஹாஸ்பிடலில் அவரை லிப்டில் அழைத்து சென்ற போது கயிறு அறுந்து, லிப்ட் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், சரோஜினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவை வெல்லும் சக்தி மனிதனுக்கு இல்லையே!
தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, CSK கேப்டன் ருதுராஜ் சுவாரசியமான பதிலளித்துள்ளார். 51 வயதில் சச்சின் IMLல் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். அதனால், தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்றார். மேலும், அவர் அணிக்காக போடும் கடின உழைப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், முடிந்தவரை சிக்ஸர்களை அடிக்க வேண்டுமென பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழர்களின் ஒவ்வொரு வீட்டிலும், சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்றில் முருங்கைக்காய் இல்லாமல் இருக்காது. இந்நிலையில், திண்டுக்கலில் கடந்த வாரம் கிலோ ₹50க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய், இன்று ₹7க்கு விற்பனையாகிறது. அதேபோல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை ₹3க்கு விற்கப்படுகிறது. இதனால், கவலையடைந்த விவசாயிகள், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.