News March 25, 2025

யஷ்வந்த் வர்மாக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

image

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்ற கூடாது என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக, நீதிபதி வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

News March 25, 2025

சவுக்கு சங்கரின் வீட்டின் மீதான தாக்குதல்: திருமா கண்டனம்

image

சவுக்கு சங்கரின் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் காவல்துறை நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 25, 2025

கடும் நடவடிக்கை தேவை: வைகோ

image

சவுக்கு சங்கரின் வீட்டை தாக்கியவர்கள் தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர் போர்வையில் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் அராஜகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், தமிழகத்தில் இத்தகைய விபரீதங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். குற்றமிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதா?

image

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த பழக்கம் நமது உடல் நலனை கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். காபியில் உள்ள கஃபைன் கார்டிசோலின் அளவு மற்றும் சில ஹார்மோன்களின் அளவையும் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துமாம். எனவே, காபிக்கு பதிலாக மோர் போன்ற நீராகாரங்களை அருந்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

News March 25, 2025

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிங்க

image

▶ரத்த அணுக்கள் உற்பத்தியை தூண்டுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ▶மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும். ▶ரத்த நாளங்களை விரிவுபடுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
▶ இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ▶ குறிப்பாக, செரிமானத்திற்கு உதவும்.

News March 25, 2025

சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

News March 25, 2025

மார்ச் 25: வரலாற்றில் இன்றைய தினம்

image

1927 – புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் பிறந்த தினம்.
1947 – அமெரிக்காவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர்.
1954 – முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது.
1992 – ரஷ்ய வீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் 10 மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பினார்.

News March 25, 2025

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்

image

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். 12PM – 4PM மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 4லி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள பழங்கள், இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை. ▶மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான். ▶ ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.

News March 25, 2025

குணால் கம்ரா மீது தவறில்லை: உத்தவ் தாக்கரே

image

ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கருத்தை தான் குணால் கம்ரா வெளிப்படுத்தினார் என்றும், தனிப்பட்ட ரீதியில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!