India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இல்லை; 420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகிறார்கள் என்று பிரகாஷ் ராஜ் பாஜகவை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். NDA கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசிய நிலையில், இது திமிர்த்தனமான பேச்சு என்றும் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து, சாமி கும்பிட்டார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த மனுவை தாக்கல் செய்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால், பத்திர விவரங்கள் தவறாக உள்ளதாக மற்றொரு சந்தேகத்தை தெரிவித்துள்ளார். ஏப்ரல்-2018 இல் தலா ரூ.1000 வீதம் 2 தேர்தல் பத்திரங்களை வாங்கினேன். ஆனால், எஸ்பிஐ வெளியிட்ட பட்டியலில் 20 அக்டோபர் 2020இல் வாங்கப்பட்டதாகக் காட்டுகிறது. இது தவறா? அல்லது என் பெயரில் வேறு எவரேனும் வாங்கியுள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
விறுவிறுப்பான WPL இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற ஆர்சிபி அணிக்கு ரூ.6 கொடியும், டெல்லி அணிக்கு ரூ.3 கொடியும் பரிசாக வழங்கப்பட்டது. இருப்பினும் வெற்றிபெற்ற RCB மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு கொடுப்பதை விட குறைவாக பணம் கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது அண்ணாமலையாரும், கிரிவலமும் தான். மற்ற எந்த தலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்கு மட்டுமே பக்தர்களுடன் சேர்ந்து அண்ணாமலையாரும் கிரிவலம் செல்லும் உற்சவம் நடைபெறும். கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமான பலனை தரக் கூடியது கிரிவலம். எப்போது கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களிலே அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றது அம்பலமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குலுக்கல் சீட்டு, லாட்டரி சீட்டு, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. ஆனால், மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை அம்மாநில அரசிடம் அளித்துள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்கு என பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.