India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.
இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.
▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
ஆபரேஷன் சிந்தூரில் பாக்.,-ன் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக IAF தளபதி அமர் பிரீத் சிங் கூறியிருந்தார். ஆனால், இதை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளார். ஒரு போர் விமானத்தை கூட இந்தியா வீழ்த்தவில்லை எனவும், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நடுநிலை அமைப்புகள் இதை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா உண்மையை வெளிக்கொண்டு வர விடாது என்றும் கூறியுள்ளார்.
தோனி, கோலி கொடுத்த அட்வைஸை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நினைவு கூர்ந்துள்ளார். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், பயிற்சி செய்யுங்கள் என கோலி சொன்னதாகவும், பயிற்சி தான் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் என தோனி சொன்னதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையின் விளையாட்டு, அதில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நம்பிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25-ம் ஆண்டில் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 18% அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் 77%, தனியார் நிறுவனங்கள் 23% பங்களிப்பை செய்துள்ளன.
இன்று (ஆகஸ்ட் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
நீண்டகாலம் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என புளோ ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. தம்பதியரிடையே உடல் உறவு இல்லாததால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும், பெண்களுக்கு பிறப்புறுப்பின் ஆரோக்கியம் குறையும், மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும், ஆண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கும் என்றெல்லாம் ஆய்வு முடிவு கூறுகிறது.
வாக்கு திருட்டு நிரூபணமானதால் PM மோடி பதவி விலக வேண்டுமென CM சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் அண்மையில் குற்றம் சுமத்தினார். இந்நிலையில் வாக்கு திருட்டை கண்டித்து காங்., சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய சித்தராமையா, குறைந்தது 14 தொகுதிகளாவது வென்றிருக்க வேண்டிய காங்., வாக்குத் திருட்டால் தோல்வியடைந்ததாக கூறினார்.
தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம், பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுதல் *உறவில் திருப்தி ஏற்படாத நிலை போன்றவையும் தாம்பத்ய உறவை பாதிக்கலாம். உங்கள் கருத்து?
Sorry, no posts matched your criteria.