India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும் மே.வங்கம் வளர்ச்சியடையவில்லை. இந்த முறை பாஜக மே.வங்கத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றார்.
மூன்று கிரகங்கள் சேர்ந்து உண்டாகும் திரிகிரஹி யோகத்தால் வெற்றி கைகூடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் மீன ராசியில் சஞ்சரித்துள்ளதால் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப் போகிறது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி, இரட்டிப்பு ஊதிய உயர்வு, பங்கு முதலீடுகளில் லாபம் என பல்வேறு பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
அரசியலில் பாஜக இருக்கும்வரை இடஒதுக்கீட்டிற்கு ஒன்றும் ஆகாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கைராகார்க்கில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இடஒதுக்கீட்டை பாஜக ஒழித்துவிடுமென காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், மகாதேவ் செயலியின் கோபத்தை மனதில் வைத்து தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொண்டார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவரும் மும்பை வீரர் ரோஹித் ஷர்மா அரை சதம் கடந்துள்ளார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அரை சதத்தை (51*) பதிவு செய்துள்ளார். தற்போது வரை மும்பை அணி 9 ஓவரில் 81/2 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 6* ரன்களுடன் களத்தில் உள்ளார். சிறப்பாக பந்துவீசிய பதீரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் மற்றும் உ.பி-யில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கன்னையா குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நோயாளிகளின் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுவது ஆபத்தானது என இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை தனி மனித உரிமைக்கு எதிரானது என குற்றம்சாட்டிய IMA, இதன் மூலம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள், தனியார் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி, Presiding Officer – ₹1700, Polling Officer – ₹1300, Office Assistant – ₹700, Counting Supervisor – ₹850, Counting Assistant – ₹650, Micro Observer – ₹1000, Sector Magistrate – ₹1500, Asst. Zonal Officer – ₹1000, Reception Officer – ₹800, Cashier – ₹800, VAO – ₹800, Village Assistant – ₹700, Instructors – ₹800.
காங்கிரஸ் MP ராகுல் காந்தியை மந்திரவாதி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என ராகுல் பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாள்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறினார். மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, நாட்டை திவால் ஆக்கிவிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பாலிவுட் பிரபலங்கள் கீர்த்தி சனோன், ரன்வீர் சிங் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கழுத்தில் மாலை, காவித்துண்டுடன் வந்த இருவரையும் காணவும், கைக்குலுக்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வெளியே அழைத்து சென்றனர். இவர்களுடன் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணர் மணீஷ் மல்ஹோத்ராவும் கோயிலுக்கு சென்றிருந்தார்.
Sorry, no posts matched your criteria.