India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாலத்தீவில் இருந்து 2ஆவது கட்டமாக இந்திய படைகள் வெளியேறி உள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9ஆம் தேதி, இரண்டாவது குழுவினரும் மாலத்தீவில் இருந்து வெளியேறி விட்டனர். இன்னும் ஒரேயொரு குழுவினர் தான் உள்ளனர். அவர்களும் மே 10ஆம் தேதிக்குள் வெளியேறிவிடுவர். எங்கள் மீது வெளிநாடுகள் அதிகாரம் செலுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கோரினார்.
மது விற்பனையில் வரும் நிதியில் தமிழக அரசும்; போதைப் பொருள் விற்று வரும் பணத்தில் திமுகவும் செயல்படுவதாக சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் தேர்தல் பிரசாரம் செய்த அவர், “திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்காமல் ஒரேயொரு வாக்கையாவது பெற முடியுமா? மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால் இப்படி ஓட்டுக்கு பணம் தர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது” என்றார்.
இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சோபிதா துலிபாலா. பாலியல் தொழிலாளியை மையப்படுத்திய ‘மங்கி மேன்’ என்ற இந்திப் படத்தில் அவர் நடித்துள்ளார். அவர்களைப் பற்றி அறிய ரெட் லைட் பகுதி ஒன்றுக்கு நேரடியாக சென்ற அவர், அவர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்து நடித்துள்ளாராம். அவர்களின் வலியை திரையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது மனநிறைவை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1972இல் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 1 பைசா குறைக்க கோரி போராடிய விவசாயிகளை திமுக அரசு சுட்டுக்கொன்றதை தமிழகம் இன்னும்
மறந்துவிடவில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. கூலி உயர்வுக் கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, 14 பேரை ஆற்றில் தள்ளிக்கொன்றது திமுக அரசு என்றார்.
இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடித்த ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மோடி
*தமிழகத்திற்கு ₹10.76 லட்சம் கோடி தந்ததாக பாஜக பொய் கூறுகிறது – ஸ்டாலின்
*ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது – ஜோ பைடன்
*அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு 59% அதிகரித்துள்ளது.
*MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,056 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்(860), ரசல்(678), கொலின் முன்ரோ(548) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
உ.பி.,யில் அகிலேஷ் யாதவின் போஸ்டர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த படே லால் செளஹான் என்பவர் போஸ்டர் மீது சிறுநீர் கழித்தப்படி, அவதூறாக பேசி, அதனை தனது பேஸ்புக் நேரலையிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, சமாஜ்வாதி கட்சியின் புகாரின் பேரில், செளஹானை சோலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.
MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டியில், டாஸ் வென்ற MI பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய MI அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
Sorry, no posts matched your criteria.