India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரிட்டன் நாட்டில் மனைவியை கொலை செய்து 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயது இளைஞரான நிக்கோலஸ் மெட்சன், மனைவி ஹோலி பிராம்லியை குத்திக் கொன்றுவிட்டு குளியலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியுள்ளார். சைக்கோவான மெட்சன் ஒருமுறை வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு அரைத்ததாகவும் புகார் உள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு பிறகு, உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை, மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் முந்தியுள்ளார். புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பட்டியலில், ஜுக்கர்பெர்க் 186.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். மார்ச் வரை முதலிடத்தில் இருந்த மஸ்க்கின் சொத்து மதிப்பு, 48.4 பில்லியன் சரியவே, 180.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரசாரத்தின்போது, பிரபல படங்களின் கொடூர கதாபாத்திரங்களுடன் சந்திரபாபு நாயுடுவை ஒப்பிட்டு ஜெகன் மோகன் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
டி20 போட்டிகளில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 148 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியும் மூன்றாவது இடத்தில் 144 வெற்றிகளுடன் இந்திய அணியும் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த அணி எது?
பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார். மோடியின் அமைச்சரவையில் 11 பெண்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பெண்கள். இதுதான் இமாலய சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் – லக்னோ அணிகள் மோதும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். ராகுல் – 33, பூரன் – 32 ரன்கள் குவித்தனர். குஜராத் அணியின் நல்கண்டே, உமேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ஆராய்ச்சி விஞ்ஞானி, திட்ட அறிவியலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட 71 பணியிடங்கள், தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வயது, கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவின் பினாமியாகச் செயல்படுகிறார் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் பாமக வேட்பாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், ‘ஸ்டாலினும், உதயநிதியும் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அறிவாலயத்தின் ஒட்டுத்திண்ணையாகக் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது’ என்றார்.
சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான புயல் வீசி வருகிறது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான்சங்க் நகரில் 60 வயது மூதாட்டி மற்றும் அவரது 11 வயது பேரன் குடியிருப்பில் இருந்தபோதே படுக்கை விரிப்போடு சேர்த்து ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களைக்கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து பேட்டி அளித்த சீமான், தோல்விகள்தான் வெற்றியின் தாய் என்றார். எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால், தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட உறுதியாக இருக்கும் என தனக்கே உரித்தான நடையில் விளக்கினார்.
Sorry, no posts matched your criteria.