India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் அதிருப்திக் குரல் எழுந்துள்ளது. பாமக சார்பில் தருமபுரியில் களம் காணும் தனது மகள் சௌமியா அன்புமணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திரை மறைவில் அரசியல் செய்துவருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி காங்கிரஸாரை சௌமியாவுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என வாய்மொழியாக அவர் சொல்லியிருக்கிறாராம்.
நடிகை அதிதி ராவுக்கும், தமக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 2 பேரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் செய்ததாக 2 பேரும் பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து சித்தார்த் தற்போது அளித்துள்ள பேட்டியில், குடும்பத்தினர் எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் 3.30 மணிக்கு மோதவுள்ளன. அதற்கான டாஸில் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது டெல்லி அணி. ஹர்திக் தலைமையிலான மும்பை அணியில் சூர்யகுமார், நபி, ரொமாரியோ ஆகியோர் இணைந்திருக்கின்றனர். டெல்லி அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் தொடரப்பட்ட அவசர மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் செல்போனிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளில் பல திரைப் பிரபலங்கள் சிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீரிடம் முதல்கட்டமாக நடந்த 11 மணி நேரம் விசாரணையில், சாதிக்கின் சினிமா தொடர்புகள், முதலீடுகள் குறித்தும் விலாவாரியாக விசாரித்ததாகத் தெரிகிறது. சாதிக் வழியே முதலீடு செய்த சினிமா பிரபலங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை, ஐதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை என டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி மீது பாஜக புகார் அளித்தால் 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், பாஜக மீது ஆம் ஆத்மி புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார். பாஜகவின் ஆயுதமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உரிய நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானிடம் பெங்களூரு தோல்வியடைய தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாததே காரணம் என்று மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். பெங்களூரு தோல்விக்கு கோலி மெதுவாக சதம் அடித்ததே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெய்டன் அளித்த பேட்டியில், தோல்விக்கு கோலி காரணம் கிடையாது, கார்த்திக்கை முன்கூட்டி களமிறக்காகதே காரணமென்று தெரிவித்துள்ளார்.
பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என நடிகர் ரஞ்சித் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, மகிழ்ச்சியாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அடுத்தவரை பாதிக்காத அளவில் இருந்தால் போதுமானது என்றார். பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பார்க்க முடியாவிட்டால் கண்களை மூடிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.