India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 போட்டிகளில் 1500 பவுண்டரிகள் அடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோஹித் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிராக 1000 ரன்களையும் கடந்தார் ரோஹித்.
தூத்துக்குடி மணப்பாடு அருகே பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது பிரசார வாகனம், கைப்பையில் சோதனை நடத்திய பிறகு, அவரை பிரசாரத்திற்கு செல்ல அனுமதித்துள்ளனர். திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவது இது 3ஆவது முறையாகும்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா, துஷாரா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளில் திமுகவால் கோவையில் பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என்று கூறிய அவர், தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக, கோவையில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் பார்வதிக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தங்கலான் படக்குழு, அவர் நடித்துவரும் கங்கம்மா எனும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
நீலகிரியில் 17 வயது பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பள்ளியில் சக வகுப்பு மாணவனுடன் சுற்றுலா சென்றிருந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தால் மாணவி கர்ப்பமானதாக தெரிகிறது. அக்கருவை கலைக்க மாணவியின் பெற்றோர் மருத்துவரை நாடியிருக்கின்றனர். இதனையடுத்து மாணவர், மாணவி இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகள்தான் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஆகையால், இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் டெல்லி அணி ஒரு போட்டியில் வென்று 9ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி விளையாடிய 3 போட்டியிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் அதிருப்திக் குரல் எழுந்துள்ளது. பாமக சார்பில் தருமபுரியில் களம் காணும் தனது மகள் சௌமியா அன்புமணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திரை மறைவில் அரசியல் செய்துவருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி காங்கிரஸாரை சௌமியாவுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என வாய்மொழியாக அவர் சொல்லியிருக்கிறாராம்.
நடிகை அதிதி ராவுக்கும், தமக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 2 பேரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் செய்ததாக 2 பேரும் பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து சித்தார்த் தற்போது அளித்துள்ள பேட்டியில், குடும்பத்தினர் எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் 3.30 மணிக்கு மோதவுள்ளன. அதற்கான டாஸில் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது டெல்லி அணி. ஹர்திக் தலைமையிலான மும்பை அணியில் சூர்யகுமார், நபி, ரொமாரியோ ஆகியோர் இணைந்திருக்கின்றனர். டெல்லி அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.