India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடன இயக்குநர் பிரதிக் என்பவருடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி விளக்கமளித்துள்ளார். அதில், “நானும் ஒரு பெண் தான். என்னை பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள். இதுபோன்ற மீம்ஸ் மற்றும் டிரோல் என்னை பாதிக்காது. விமர்சிப்பதற்கு முன்பு கொஞ்சமாவது சிந்தியுங்கள். சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
சீட்டுக்கும், ரூபாய் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்படத்தான் செய்யும் என அதிமுகவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மறைமுகமாக சீண்டியுள்ளார். பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலம் என்பதால் தான் தமிழகத்தில் மட்டும் சீக்கிரமாக தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பாஜக வெற்றி பெறக்கூடிய மாநிலங்களில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதாக விமர்சித்தார்.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் திசையில் வந்த லாரி மீதும் மோதியது. இதில் 21 பேர் பலியான நிலையில், 38 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 11 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணிக்கு 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி வந்தது. 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பின்னர், அடுத்தடுத்த விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பெங்களூரு அணி வெற்றி பெறுமா?
ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு விழா மும்பையில் நடைபெறுகிறது. இதில், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களாக கருதப்படும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி உடல்நலக் குறைவால் பங்கேற்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தடுமாறி வருகிறது. முதலில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த டெல்லி அணி, 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், பவுண்டரி எதுவும் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்த டெல்லி அணி, 13ஆவது ஓவரில் மீண்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது. சோஃபி-3, ஷ்ரேயங்கா, ஆஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகின்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் <
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எடிட்டிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும், அதில் படத்தின் வெளியீட்டு தேதி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில், பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய, பிரகாசமான பச்சை வாயு மண்டலம், ஒளிரும் அண்டப் பொருட்களின் வளையத்தால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விஞ்ஞானிகள், ஹப்புள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் இதனை படம்பிடித்ததாக தெரிவித்தனர்.
பொன்முடியை அமைச்சராக்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை நிராகரித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று பதில் கடிதம் எழுதியிருக்கும் ஆளுநர், “பொன்முடியின் தீர்ப்பு நிறுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்படவில்லை” என்று பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.