India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐஃபோனில் ஜெமினி ஏ.ஐ தொழில்நுட்பத்தை இடம்பெற செய்வது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் ஜெமினி ஏ.ஐ வசதிகள் இடம்பெறும். இதே போன்று, ஐஃபோனில் சாட்ஜிபிடி-ஐ இடம்பெற செய்வது தொடர்பாக ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடனும் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மலையாளத்தில் மிகக் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரேமலு’ ₹100 கோடி வசூல் செய்ததைக் கண்டு மொத்தத் தமிழ்த் திரையுலகமும் மிரண்டுபோயிருக்கிறது. அந்தப் படத்தின் நாயகி மமிதா பைஜுவுக்குக் கோடம்பாக்கத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பல அழைப்புகள் போயிருக்கின்றதாம். கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தும் அவர், எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் நல்ல கதைக்காக காத்திருப்பதாக தெரிகிறது.
இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக 3 வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜப்பானில் திரையிடப்பட்ட ‘RRR’ திரைப்படத்தை பார்த்த மூதாட்டி, இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவிக்கு பரிசு வழங்கி மகிழ்ந்துள்ளார். ராம்சரண், ஜூனியர் NTR நடித்த ‘RRR’ படம் உலக அளவில் ஹிட்டானது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த 85 வயது மூதாட்டிக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போனதால் ராஜமெளலிக்கு அன்புப் பரிசு வழங்கினார். இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் ராஜமெளலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் தற்போது பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.
இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுகிறார் ➤ நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவங்குகிறார்.
வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.